'எங்கே பார்த்த மாதிரி
இருக்கே' என்ற
யோசிப்பினூடே,
எனைக் கடந்து
சென்றவரைப் பார்த்தேன்.
அவரும்
தன் முகத்தில்
வியப்பையும்,
புன்னகையையும்
ஒருசேர தவழ விட்டார்.
ம்ம்...சட்டென ஞாபம்
வந்தது எனக்கு.
"இனி உன் முகத்தில்
விழிப்பதில்லை" என
என்னிடம் கனல் தெறிக்க
சொல்லிச் சென்ற
பால்ய காலத்து நண்பர் தான் அவர்.
அதே முகம்... ஆனால் வேறு மாதிரி!
- ஆனந்தி ராமகிருஷ்ணன்