பால் குடி மறவா
பச்சிளங்குழந்தைக்கு
சில ஆயிரம் ரூபாய்
நுழைவுக் கட்டணம் கேட்கும்
கல்வி கூடங்களையும்..

மூன்றாம் வகுப்பு
மரியாவோ.. செல்வியோ
வகுப்பு இடைவெளியில்
சிறுநீர் கழிக்கச்சென்ற
அந்த புதர்காட்டிலிருந்து
வெளிவந்தபோது
கண்ணீர் வழித்து
அடிவயிற்றை பிடித்தற்கான
காரணகர்த்தாக்களை
பிடித்து உலுக்கத் தெரியா
மலட்டுச் சட்டங்களையும்..

எந்த எவனுக்கும்
எவன் எவளுக்கும்
எது நடந்தாலென்ன..
விடுதலை உயர்குடிக்கு
தண்டனை கீழ்குடிக்கு என
அத்துமீறல் போதையில்
ஆடித்திரியும் நீதிமான்களையும்

உதைத்து திருத்த வழிதெரியா...
உங்கள்
வந்தே மாதரத்தையும்
தேசப் பக்தியையும்
எந்த கருவாட்டுச் சட்டியில்
நான் போட்டு வறுத்தெடுக்க..?

- இரா.சந்தோஷ் குமார்

Pin It