இந்த உலகின் வியப்பை
வாசித்துவிட அலைகிற நாடோடி நான்
நதியில் உதிரும் இலை என் சாயல்
காற்றின் திசையற்ற பிரவாகம் எமது
மலையுச்சிக்கு வந்தமரும் கழுகின்
கூடிருக்கும் அடர்க்காடெனது
நிலத்தின் ஆகிருதியை ஊடுருவி பாயும்
சிறு புல் விறைப்பு எம் உடல்
இந்த நாடோடியுடன் பின்னலைகிறது காலம்
- மௌனன்