nature 332

இந்த உலகின் வியப்பை
வாசித்துவிட அலைகிற நாடோடி நான்

நதியில் உதிரும் இலை என் சாயல்
காற்றின் திசையற்ற பிரவாகம் எமது
மலையுச்சிக்கு வந்தமரும் கழுகின்
கூடிருக்கும் அடர்க்காடெனது
நிலத்தின் ஆகிருதியை ஊடுருவி பாயும்
சிறு புல் விறைப்பு எம் உடல்
இந்த நாடோடியுடன் பின்னலைகிறது காலம்

- மௌனன்

Pin It