prabakaran 385என் மரணம்
நிகழ்ந்து விட்டதாக
என் எதிரிகள் தான்
தொலைக்காட்சியில்
முதலில் அறிவித்தார்கள்
ஒரு பிணத்தின்
கழுத்தருகே
என் முகத்தையும்
வைத்துக் காட்டினார்கள்
எனக்கு
அந்நியமானவர்கள் முதல்
அன்னியோன்னியமானவர்கள் வரை
அனைவருமே
என் மரணத்துக்கு
இரங்கல் தெரிவித்தார்கள்
என் மரணத்தை
அவர்கள்
உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்
என் மனத்தின்
அடியாழத்தில்
ஏதோவோர் ஓரத்தில்
ஒரு சிறு நம்பிக்கையின்
கீற்று
நான் மரணிக்கவில்லையென்று
சொல்கிறவரை
என் மரணத்தை
எப்படி நான் நம்ப முடியும்.
என் அடையாளம்
அவன்.
அவன் வேறு
நான் வேறோ?

எழுநூறு கோடி மனிதர்கள்
இருப்பதாய் நம்பும்
கடவுள்
இருக்கிறாரா என்று
எப்படி சந்தேகிப்பதில்லையோ
அப்படியே
எட்டு கோடி தமிழர்கள்
நம்பும்
ஒரு மனிதன்
இருப்பதை நாங்கள்
சந்தேகிப்பதில்லை.

Pin It