வீரசாகச கதைகள் படிக்கும் அப்பா
கதைக்குள் உலவி வெகு காலம் ஆகிவிட்டது
குதிரைப் படைகளையும் யானைப் படைகளையும்
சுற்றிக்கொண்டிருந்தவர் நடந்து போகிறார்
வந்தியத்தேவன்
ரோமாபுரி பாண்டியன் செழியன்
கருணாகரத் தொண்டைமான்
யவனராணி மஞ்சளகி
கடல்புறாவின் அலைகளொடு நட்பு வத்திருந்தவர்
புதினங்களில்
திரைப்படங்களில் நுழைந்து
சர்வ சாதரணமாக
வெளியே வருவார்
எம்ஜிஆர் பாடல்களை
பாடிக்கொண்டு இரவுகளைக் கழிப்பது
என் எஸ் கிருஷ்ணன்
எம் ஆர் ராதாவைப்பற்றி பேசுவது
தியாகராஜ பாகவதர் சின்னப்பா
சுந்தரம்பாள் ஜிக்கி என்றிருந்தவரை
தொலைக்காட்சி தொடர்கள் தூக்கிச்சென்றது
குரோதம் வஞ்சகம் பொறாமை நிரப்பப்பட்ட
நிழல் மனிதர்களின் கைகளில்
இரவுகள் பகல்களின் குவியல்கள்
எல்லாம் எளிய மனிதர்களிடமிருந்து
பிடுங்கப்பட்டவை
இதில் அப்பாவின் இரவு எது
அப்பாவின் பகல் எது
இரவு பகல்களை திருடுகிறவன்
திறமையாளன் என்ற
பட்டத்தோடு வெளியே திரிகின்றான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்