man 185என்
காயங்களுக்கு உதவாதவை
உன் ஆறுதலும் கவிதைகளும்
என்
கண்ணீருக்குப் போதாதவை
உன் சிறு அரவணைப்பும் கைக்குட்டைகளும்
என்
தொன்றுதொட்டு தொடரும் கவலைகளுக்கு முழுத் தீர்வு வழங்காதவை
உன் பொய்யான அக்கறையும் போலியான சலுகைகளும்
எனினும்
மீண்டும் மீண்டும்
முளைக்கவும்
உயிர்த்தெழவும்
உன்னைவிட எனக்கு நன்றாகவே
சொல்லித்தந்து கொண்டிருக்கின்றாள்
ஓர் ஆதி மனுஷி.

- அமுதாராம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It