men 401கிராமத்தில் அன்று
நிகழ்ந்த
எனது தந்தையின்
மரணத்திற்கு
வீட்டுக்கொருவர் வந்து
அடை மழையிலும்,
கழுத்து வரை நீரில் சென்று
சடலத்தை அடக்கம் செய்தோம்.
வர முடியாதவர்கள்
மற்றொரு நாளில்
நேரிலும், கடிதத்திலும்
அரவணைத்துத்
தேற்றினர்.

நகரத்தில் நேற்று
நிகழந்த மரண செய்தியை
நாளிதழில் பார்த்து
எனது
அடுக்குமாடி மேல் தளத்தில்
குடியிருப்பவர்,
உறவினர்கள்,
நண்பர்கள்
"கடவுள்
உங்களுடன் இருப்பார்" என
குறுந்தகவல்,
இணைய முகநூலிலும்
செய்தி அனுப்பினர்.
"அப்போ நீங்க?" என வந்த
வார்த்தைகளை
தொண்டையில்
பூட்டிவிட்டு
அலுவலகம் கிளம்பினேன்.

- அம்பல் முருகன் சுப்பராயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by அம்பல் முருகன் சுப்பராயன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.