*
நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்
நீ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்
பேசுதலுக்கும் பார்த்தலுக்குமான
இடைவெளியை
நான் வெறிக்கத் தொடங்குகிறேன்
சொற்களற்றுப் போன இசையை உணர்ந்தவளாக
'ம்..?' - என்கிறாய்
நீ பார்த்துக் கொண்டிருந்தது
என் பேச்சைத் தான் என்பதாக
அது
ஓர் இசைக்குறிப்பைப் போல்
ஒலிக்கிறது
'ம்..' - என்ற உன் ஒலிக்குறிப்பை
இசைக் குறிப்பாக எழுதிப் பார்க்கிறேன்
அது
வேறொரு 'ம்..' ஆக
இசைக்கிறது
பேசுதல் பார்த்தலின் இணைப்புள்ளிகளில்
மீட்டுதல் அரங்கேறி உதிரக்கூடும்
இன்னுமொரு
'ம்..'
****
-- இளங்கோ (
சொற்களற்றுப் போன இசைக் குறிப்புகள்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.