குறைந்தபட்ச கருணையின் நிறத்திலொரு அன்பை
இறைஞ்சி நிற்பதில்
யாதொரு இழுக்கும் இல்லை

மீதமிருக்கும் வாழ்வின்
நகர்தலுக்கு
பின் நான் என்ன தான் செய்ய முடியும்
உங்கள் கைநழுவி உதிரும்
பிரியப் பருக்கைகளை
எனக்கே எனக்கான
கருணையென உண்டுயிர்க்கிறேன்

நீங்களே என் அருளாளர்கள்
உங்கள் கைகளை உயர்த்தினால் போதும்
ஆசீர்வாதமென நான் பற்றித்தழைக்கிறேன்
ஒடுங்கிய உயிர் மீளும்படியாய்
ஒரு முத்தமிடுங்கள்
நீங்களே என் நித்திய கடவுளென
குறிப்பெழுதி வைப்பதில்
எனக்கொரு சங்கடமுமில்லை

- க.உதயகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.