இது அதன் பெயரால்
அப்படியே அழைக்கப்படும்
தனக்கான அந்தரவெளிகளோடு
தனித்தே தான் இருக்கும்
துயரத்தின் காட்சியையும்
பாவத்தின் நீட்சியையும்
துரத்தும் பாவனையை
தொடர்ந்தே தான் கொடுக்கும்
தப்பிக்கும் நேரமும்
தப்பிழைக்கும் காலமும்
தப்பாமல் தவறுக்குள்
வரவொன்றை வைக்கும்
இருப்பின் ஓடமதும்
சுழல் காற்றின் கையில் சிக்கி
சிருங்காரமாய் ஆடும்
ஆடுமிந்த ஆட்டமது
முடிந்த பின்னும்
முயற்சிக்கு முற்றுவைத்து
முடிவைத்தேடி தொடருமிதை
அதுவென்றே
நல்லுலகம் கூறும்...

- ரேவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.