*
யாரோடும் சமரசமில்லை
எந்தச் சந்தர்ப்பங்களுடனும் உடன்படிக்கையில்லை

உப்புப் பூத்துவிடும் நம்பிக்கைகளை
கொய்யும் விரல்களோடு சிநேகம் இல்லை

சந்தேகக் கண்ணிலிருந்து கீழிறங்கும் நிறங்களில்
தொங்கும் சம்பவங்களின் திரை மடிப்பில்
சிக்கித் தவிக்கும் மூச்சுக்காற்றில் உயிர் இல்லை

மரணத்துக்கான ஒத்திகையில்
பார்வையாளர் பகுதியிலிருந்து வீசப்படும்
ஒற்றைக் கயிற்றில் தொடங்குகிறது
ஓர் அபத்த நாடகத்தின் முதல் காட்சி

மேடையேறத் துடிக்கும் கால்கள் ஒவ்வொன்றும்
பந்தாடுகிறது உணர்ச்சித் தருணங்களை

மைதானமென விரியும் எல்லையற்ற அக்காட்சியில்
முறுக்கும் நெடுக்குமாக சதா உலவுகின்றன
நம்பிக்கைகளும்
அதன் வாலாகிப் போன துரோகங்களும்

******
-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.