*
வாழ்வதின் அவசியத்தை
ஒரு செய்தித்தாளைப் போல தினமும் பிரித்து வைத்துக் கொள்கிறோம்
நமக்குப் பிடித்தமான ஒரு மேஜையில்
திறந்திருக்கும் வாசல் வழியே கொஞ்சமும் தயங்காமல் வெயில் வருகிறது
கடிகாரம் தொங்கும் சுவரைத் தொட்டதும் நின்றுவிடுகிறது
நொடி முள்ளிலிருந்து நெடுக வழிந்திறங்கும் நிழலின் இழை
வெயிலுக்கு தருவதில்லை தன் உதடுகளை
துடிக்கும் மெல்லிய சப்தத்தோடு அடங்கிவிடுவதாக இருக்கிறது
அவற்றின் சன்னமான உரையாடல்
அன்றாட நிகழ்வின் அத்தனை செய்திகளையும்
பிரித்துப் படிக்க நமக்கு தான் நேரமிருப்பதில்லை
அதனால் என்ன
ஒரு சமயம் போல
வாசல்கள் திறந்தே கிடக்கின்றன
******
-- இளங்கோ (
நொடி முள்ளிலிருந்து வழிந்திறங்கும் நிழலின் இழை..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.