*

என் மதகொன்றின் நிழல் காவி இழுத்தபடியே
விரைகிறாய் எங்கிருந்தோ புறப்பட்ட நதியென

சொற்கள் சொற்களாய் சரம் தொடுத்து உதிரும்
அர்த்த இதழ்களில் மௌனத் தடம் ஊறும் முத்தம் ஈகிறாய்

கரை மேவும் மரத்தின் தாழ்ந்த கிளைப் பற்றும் கரம் உயர்த்தி
நிறம் உலரா செதில் நிரட விரல் நீட்டுகிறாய்

நீயாகி சலசலக்கும் நீர்க்குமிழில் உடைந்தபடி அழைக்கிறாய்
குரல் நீவி அசையும் சிறகென எனைநோக்கிப் படபடக்கிறாய்

சாயும் இளமஞ்சள் வெயிலோடு நினைவாகிறேன்
மடியேகும் காற்றழுத்தி அடர்மேக மழையாகிறேன்

சுருள் நீவிப் பிரியும் சருகின் இள நரம்பில் ஊர்ந்திட
பின்தொடர்ந்து வருவேன் நீ முட்டி நிற்கும் ஒற்றைப் புல் நோக்கி

*****
- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.