எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருந்த
எந்த வாகனத்தின் வெளிச்சமும்
உன் சுவாசத்திற்கான
என் தேடலை
பெரிதாய் சிதைக்கவில்லை...
உன்
விரல்களைக் கோர்த்தபடி...
தோள்மீது சாய்ந்தபடி...
தயங்கித் தயங்கி
விழிகளைப் பார்த்தபடி...
உன்னிதழின் ஈரத்தை எதிர்பார்த்தபடியே
உன்னோடு நடந்துகொண்டிருந்தேன்...
உணராத ஒரு நொடியில்
பயணம் முடிந்துவிட்டிருந்தது...
நீளாத பாதை
நீண்டதாய் எண்ணிக்கொண்டு
நானறியாத உன்னிதழீரத்தோடு
தனியே நடந்துகொண்டிருக்கிறேன்
என் வீட்டையும் தாண்டி...
- தனி (
உன் இதழ் ஈரத்தோடு...
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- காகிதக் கப்பலுடன் (11 செப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.