பின் யாமங்களில்
மரங்களின் உச்சியிலிருந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது
மழை...

கேட்பார் யாருமில்லை...

ஒழுகும் மழை
ஓய்வதாயில்லை...

புரளும் வெள்ளம்
என் வாசலையும்
நனைத்தபடி
நகர்கிறது...

கையில் சிறு
காகிதக் கப்பலுடன்
இன்னும்
வாசலிலேயே
நின்றுகொண்டிருக்கிறேன்...

- த‌னி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.