சூழ்ந்திருக்கும்
மேகத்திரைகளை விலக்கி
எனக்கான வானங்களுக்குள்
பயணிக்கிறேன்...
பறக்கப் பறக்க
ஆழங்களுடன் விரிகிறது
என் வானம்...
ஆகாயம்தாண்டிப் பறப்பதன்
தயக்கங்கள் ஏதுமின்றி
நீள்கிறது என் சிறகு...
இளைப்பாறுதலின் தேவைகள்
எதுவுமில்லை...
அதற்கு இடமுமில்லை...
எனக்கான
என் தனிமையுடன்
பால்வெளிகள் தாண்டிப்
பறக்கிறது என் சிறகு...
- தனி (
பால்வெளிகள் தாண்டி
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- காகிதக் கப்பலுடன் (11 செப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.