முனைந்து செய்கையில்
கலைந்துவிட்ட மண்பாண்டமாய்
ஒரு நேர்த்தியற்ற ஓவியமாய்
கலைந்து விடுகிறது
மனது.

உடைந்த கண்ணாடிச்சில்லுகளில்
நீ சேகரித்த எனது பிம்பமென
சிதறல்களாய் நான்.

என்னை முழுமையாய்
அறிய விரும்பாதவளாய் நீ.
உனக்குள் என்னை முழுமையாக்கும்
எந்த முயற்சிகளும் அற்று நான்.

இருந்தாலும்-
பிரிய இயலாமல்...
மூக்குக் கயிற்றால்
பிணைக்கப்பட்ட ஒரு மிருகமென
கசந்துகொண்டே
கடந்து விடுகிறோம்
நம் வாழ்வின்
சூரியன்களையும்...
நிலவுகளையும்.

Comments

1 comment

1
vrk vijaya
very fine.

then how I type in tamil

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.