என்னை ஈர்த்துவிடுகிறது
உனது பெயர் குறித்தான
எந்த ஓசையும்.

இரவில்-
எனது கூடுகளுக்குள் தன்னைச்
சுருட்டிக் கொள்ளும் வானம்
விரியத் துவங்குகிறது என் மேல்
உனது நினைவுகளோடு
ஒரு பெரும் மழையென.

அறிய இயலாத ஒரு பெரும் ஆழத்தில்
பயணிக்கிறது மனம்...
வெளிவரும் வழியை அறிவதற்கற்றும்..
விருப்பமற்றும்.
 
தவிப்பில்-
உறக்கம் அற்றதாகி...
விழிப்பும் அற்றதாகி விடுகிறது
எனது காலம்...

உன்னைத் தொடரும்
ஒரு முடிவற்ற பயணத்தை
இரசித்தபடி.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.