கைஉயர்த்தி
அடித்தொண்டையில் இருந்து
பீறிட்டெழும்
முழக்கங்களில் கனலும்
எதிர்க்குரல்கள்
தடியடிகளிலும்
கண்ணீர்ப்புகையிலும்
பீச்சியடிக்கப்படும்
சரமாரியான
நீர் அம்புகளிலும்
உருகி வழிந்தோடுகின்றன
மக்களின்
ரௌத்திரங்கள்
எரிந்துகொண்டிருக்கும்
கொடும்பாவியின்
தீச்சுவாலைகளில் தெரிகிறது
நசுக்கப்பட்ட மக்களின்
கோபக்கனல்
இத்தனைக்கும் நடுவே
நரமாமிசம் புசித்து
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்
தொடர்புடைய படைப்புகள்
கொடும்பாவிகளின் தீச்சுவாலை
- விவரங்கள்
- நா.இளங்கோ
- பிரிவு: கவிதைகள்
More articles by நா.இளங்கோ
- சொற்களின் கல்லறை (30 ஜன 2014)
- மேய்ப்பனிடம் சிக்கிய மந்தைகள் (25 ஜன 2014)
- அடையாளக் குறி எங்கே! (22 ஜன 2014)
- எழுதப்போகும் கவிதை (31 டிச 2013)
- வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் வெண்பாவில் என்பா விருந்து (30 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.