நிலவின் கீற்றும்
குளத்தின் சுவாசமும்
மரங்களின் மௌனமும்
புதர்களின் சிலிர்ப்பும்
அவள்
பின்னிய கரங்களின்
விடுவிப்புக்காகவோ,
சிறகுகளின்
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக
அல்ல ஒட்டுமொத்தமாக
அகற்றப்படுகையில்
அவள்
வெள்ளுடை நனையாது
சற்றே தூக்கி
நீரின்மேல்
நடந்து ...வனம் சேர்வாள்.
More articles by உமா மோகன்
- ருசி (10 மார் 2020)
- அன்றாடத்தின் எதிர்கொள்ளல்கள் (15 அக் 2019)
- கொத்துப்பூ (03 ஜூலை 2019)
- மனம் என்ற மண்ணாங்கட்டி (31 டிச 2018)
- பிரசங்கிகளின் உலகம் (18 ஏப் 2016)