*
ஒற்றை முகப் பாவனையில்
யாவற்றையும் எழுதிப் போகிறது மௌனம்
கணிப்பின் மீறலில் துடிக்கும் அர்த்தங்கள்
ஒரு அடர்ந்த திரைச் சீலையைப் போல்
இவ்விரவைத் தொங்க விடுகிறது
பேச்சற்று அமர்ந்திருக்கும் மேஜையில் எதுவுமில்லை
வெறுமையின் வெளி
மெழுகிப் பூசுகிறது
மனதின் சொற்ப வெளிச்சத்தை
வார்த்தைகள் கொண்டுத் தாங்கிப் பிடிக்கும்
வலி ஒவ்வொன்றும்
அவசியமற்ற புன்னகையோடு சூழ் கொள்கிறது
சலனத்தின் மென்வருடல் நழுவி உடையும் என் நிழலில்
சில்லுகளாய் நொறுங்கிட அனுமதிக்கிறது
இக்கொடுந்தனிமை
*****
- இளங்கோ (
நழுவி உடையும் சலனம்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.