*
சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில்
நீயொரு பாதையாக இருப்பதில்லை
பயணத்தின் தீர்மானமற்ற
முதல் புள்ளியை வரைபடமாய்
காகிதத்தில் மடித்துத் தந்தாய்
இளைப்பாறுதலுக்கான
உனது எளிய விதிமுறைகளை
கையாளுவதில் உருவாகும் தயக்கம்
பழுத்த ஓர் இலையைப் போல உதிர்கிறது
என் நிழலில்
திசைகாட்டியின் முள்
துருவங்களை இழந்ததோடு
அறிவிப்புப் பலகையொன்றை தயார் செய்கிறது
உன் குரலென
தன் அடையாளங்களைத் திரட்டி
மீளாத் துயரின் அடர்த்தியுள்
மூச்சுத் திணற நடந்த பின்னும்
ஒரு வெளிச்சமோ
அடைப்பட்ட ஒற்றைக் கதவோ
கனத்த பூட்டோ
உனது சாவியோ
எதுவும் தென்படவில்லை
நீயொரு பாதையென
சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில் நீ இருப்பதேயில்லை
******
- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- காணாமல் போகும் கழுகுகள்
- ஊழல்... ஊழல்... பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!
- மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!
- காதல் தாண்டவம்
- சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?
- பெரியார் முழக்கம் மே 09, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- இராமாயணம் தொடர் விதைத்த மதவெறி
- சமூகப் போராளிகளை இனம் காண்போம்... கொண்டாடுவோம்!
- மாசி வீதியின் கல் சந்துகள் - கவிதை நூல் விமர்சனம்
- மணாளனே மங்கையின் பாக்கியம் (புரூவச் சக்கரவர்த்தி கதை)
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்