*  
ஒரு
தனிமையைக் கைப்பற்றுதல்
என்பது
கானலாகிக் கரைகிறது

கான்க்ரீட் நகரின்
நிமிடங்கள் சதா துருப்பிடிக்கின்றன

அதன்
தூய்மைக் கணத்தை தரிசிப்பதற்குள்
எத்திசையிலிருந்தாவது
துப்பப்படுகிறது
அதன் மீது ஓர்
எச்சில்

தனக்கானத் தனிமையைக்
கைப்பற்றுதல்
என்பது
வளரும் சுவர்களுக்கு நடுவே
அசையாத பல்லியின் கீற்றுப்
பார்வையை ஒத்துப்
பெருகுகிறது
இந்நகரெங்கும் கைவிடப்பட்ட
குறுகலான
சந்துகளைப் போல்
*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
Pin It