வானிலிருந்து வீழ்ந்த

அந்தப் பறவைக்கு

ஒற்றைச் சொல்லில் இருந்திருக்கிறது

விஷம்

உணரப்படாமலே.

 

பிராயம் கூடிய நட்பு

'பொசுக்கென்று' போய் விட்டது

பற்றி

மாய்ந்து மாய்ந்து

சொல்லிக்கொண்டிருக்கிறேன்

பக்கத்து வீட்டுப் பாட்டியை

இழந்துவிட்ட துக்கம் போல்.

 

'நானாவது அப்படி மாற்றிச் சொல்லியிருக்கலாம்'

'அவனாவது அதைக் கேட்காமல் இருந்திருக்கலாம்'

மரித்து விழுகிற பறவை

மனதிலா விழ வேண்டும்?

'தானாய்' மறுபடி பறக்காதா?

மந்திரம் ஜெபித்தபடி பொழுது.

- இப்னு ஹம்துன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.