*
வந்துப் போவதில் இருக்கும்
சிரமத்தை பொருட்படுத்தவில்லை
வார்த்தைகள்
காகிதங்களின் முனை மடங்குதலில்
அரூபமாகும் எல்லைகளை
மீறுவதாக குற்றம் சுமக்கின்றன
நவீனப் படிமங்கள்
ஒவ்வொரு புள்ளியோடு
முடிந்துவிட்டதாக வரும் அறிவிப்பு
ஒரு பைத்திய இரவின்
அர்த்த ஊளையிடுதலாகவோ
வால் விடைத்து இருளை நக்கும்
ருசியெனவோ
மாம்சத்தின் ரத்த கவுச்சியென்றோ
தீர்ந்துவிடுகிறது
உடன்படிக்கையோடு கை குலுக்குதல்
சிரமமென பொருட்படுத்துவதில்லை
வார்த்தைகள்
*****
--இளங்கோ (
தொடர்புடைய படைப்புகள்
குற்றம் சுமக்கும் நவீனப் படிமங்கள்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.