*
இந்த அறையின் இருளுக்குள்
என் ஜன்னல் கடக்கும்
காலடிச் சத்தங்கள்
மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே
மழை நீரைப் போல் வழிந்து
இறங்குகிறது
மெல்ல பரவி என் பாதங்களைத் தழுவி
காதுகளை எட்டும்போது
தெருவின் விசும்பல்
மனவெளியில்
நிம்மதியற்று அலைகிறது
அடித்து ஓய்ந்த பின்
காற்றில் மிச்சமிருக்கும்
ஆலய மணியின்
கடைசி ரீங்காரமாக
****
--இளங்கோ (
ஜன்னல் கடக்கும் காலடிச் சத்தங்கள்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.