Kid in treeதின்றுகொண்டிருந்த

பழ மும்முரத்துக்கும்

 

வாயோர வடிதலின்

வடவடப்புக்கும் இடையே

 

"கொட்டைய முழுங்குனா

வயித்துல மரம் வளருமாப்பா.."

 

காதோரமாய் காத்திருந்த கேள்வியொன்று

நினைவுக்கு வந்தவளாகக் கேட்டாள்.

 

என் ஆமோதித்தலின்

நொடி விதை வெடிப்பில்

 

அவள்

வயிற்றில் வேர்பதித்து

தலை வெளி

கிளை பரப்பி

பரிபூரணத் தருவாக

விரிந்து நின்றது

 

அவள்

ஊஞ்சலாடிய மரமொன்று.

 

கனிந்திருந்த

அதன் பழங்களைப்

பறித்துப் பிரீதியுடன்

தின்னத் தொடங்கினாள்

கொட்டைகளுடன்.

 

- மதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.