கடவுளின் படைப்புகள் எல்லாம்
தத்தமது துணைகளுடைன்
ஆதாமிடம் பணிவுடன் நெருங்கி
தங்களுக்கான பெயர்களை
அவனின் குரலால்
முன்மொழியப்பட காத்திருக்கிறது.
அப்படியும்
தனக்கான ஒரு துணையின்
அவசியத்தேடலை
துளியும் அறியாதவனாயிருந்த
ஆதாமின்   முதல் நித்திரை
கலைந்தவுடன்
ஏவாளை முன் நிறுத்தினான் தேவன்.
காமம் துளியும்  பரிச்சயப்படுத்தாத
அவர்களின் நெருக்கமான
அந்தரங்கத்தேடலில்
ஏடன் தோட்டம் முழுவதும்
முதன் முதலாக
காமத்தின் மணம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.