உருவாக்கியபோதும்
ஒன்றாகத்தான் இருந்தன
களிமண்ணாக இருந்தவற்றை
கற்கள் பிரித்து சீர்படுத்தி சுட்டு ,
பின் வேக வைத்து,
வண்ணக்குழம்புகள் பூசி,
ஒன்றாகத்தான் அடைபட்டன
அந்தக் காகிதப்பெட்டிக்குள்
விலையும் அதே
ஒரு வித்தியாசமுமில்லை.
வாங்க வந்தவனும்
வேறுபாடு ஏதும்
பிரித்தறிய இயலாமல்
வாங்கிச்சென்றான்.
அதுவரை கூடவே இருந்த
கோப்பைகள்
பிரித்து வைக்கப்பட்டன.
இரண்டாவது கோப்பையாய்
டீக்கடையில்
புரியாமலே நானும்
அந்தக்கோப்பைகளை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவையும் என்னை.
இரண்டாவது கோப்பை
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்
More articles by சின்னப்பயல்
- துளிப்பாக்கள் (24 ஜன 2014)
- நாங்கள் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை (12 ஜன 2014)
- துளிப்பாக்கள் (04 டிச 2013)
- நான் ஆதாம் (16 நவ 2013)
- துளிப்பாக்கள் (09 அக் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.