*
படி வழியே இறங்கும்
அமைதியான நீரை ஒத்திருக்கிறது
உன் பாதங்கள்
அவைகளை
இரவின் மதில் சுவரிலிருந்து
ஒரு ஜோடி பச்சைக் கண்கள்
சாம்பல் நிறமெனக் குறிப்பெடுக்கின்றன
பஞ்சுப் படுக்கையின் மேல்
உன் பாதங்கள் ஒரு இறகைப் போல மிதக்கின்றன
என் கனவில்
நம் ரதத்தில் சரியும் சக்கரங்களை
இட்டுச் செல்லும்
கால் தடங்கள்
ஒற்றையடிப் பாதையினூடே
உன்னிடமே
வந்து சேர்கிறது
இடுப்புயர நாணலின் வெட்கத்தில்
இடம் மாறும் இதயம்
அடுக்கடுக்காய் அவிழச் செய்கிறது
துரோகத்தின் சாயலை
பிரியத்தின் பதற்றத்தை
மௌனத்தின் கசப்பை
பிறகு
வடிந்து போன மிச்சமென
தேங்குகிறது
கொசு மொய்க்கும்
ஒரு வார்த்தை
*****
--இளங்கோ (
சாம்பல் நிறக் குறிப்புகள்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.