பிரியமானவர்களிடம் எல்லாம்
விடைபெற்றுக் கொண்டேன்
ஓர் நாள்
ஒற்றை ரோஜாவோடு
உனைப் பார்க்க வந்தேன்
அந்த ரோஜா
உனக்காக மலர்ந்ததல்ல
என்று நீ மறுதலித்தாய்
வருத்தத்துடன் நான்
விடைபெற்றுச் சென்றேன்
உனது பார்வைகள் தான்
பல்கலைக்கழகத்தில்
எனைப் பட்டம் வாங்க
வைத்தது
அந்த தேவதையை வாழ்வினிலே
தொலைத்தேன்
இதயத்தைப் பறித்துக் கொண்ட
அவள்
இரக்கமற்றவளாய் இருந்தாள்
அன்று ரோஜாவை
ஏற்க மறுத்த அவள்
இன்று
மலர் வளையத்தோடு வந்து
உட்கார்ந்திருந்தாள்
என் சடலத்தின் அருகில்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.