கடல்...
இது நிலத்தின் பாகுபாடா?
அல்லது குறியீடா?
ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல்
மிதக்கிறது கடல்...
நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை...
காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்...
தலையால் என் பாதம் தொட்டு
வாலால் அத்துவானத்தை இடிக்கிறது
திமிர் கொண்ட கடல்...
காதலில்
ஊடல்களை விழுங்குவது கரை,
காதல்களை விழுங்குவது கடல்.
நான் கடல் காதலன்.
இதை எழுதுகையில்
கடல் பைத்தியம்.
காலம் கடலை உறுதி செய்கிறது...
கடல் பூமியை உறுதி செய்கிறது...
நீரில் எட்டிப்பார் நீ தெரிவாய்...
கடலில் எட்டிப்பார் கடல்தான் தெரியும்...
கடல் ஒரு விந்தை...
விந்தை கடலில் சந்தை...
கடல் உலகின் நவீனம்...
உலகம் கடலின் நவீனம்...
கடல் ஒரு கோணத்தில் இறை...
உன்னிலும் உண்டு...
என்னிலும் உண்டு...
நீரின்றி தோல் இல்லை...
தோல் இன்றி விலங்கு இல்லை...
- ராம்ப்ரசாத், சென்னை (
தண்ணீர்க் காட்டில் - 1
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்
More articles by ராம்ப்ரசாத்
- PK - திரைப்பட விமர்சனம் (05 ஜன 2015)
- மிஷ்கினின் 'பிசாசு' - விமர்சனம் (24 டிச 2014)
- Interstellar - திரைப்பட விமர்சனம் (21 நவ 2014)
- ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? (28 ஏப் 2014)
- ராதா (27 மார் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.