பரிதியை மேகம்
மறைத்திடும் நேரம்
மழை வரக்கூடும்
பூவிதழ்களின் மேலே
வண்டுகள் அமர்ந்து
ரீங்காரம் பாடும்
விடியலில்
குயில் தனியாய் அமர்ந்து
தனிமையை அருந்தும்
நெல்மணிகளைத் தின்னும் புறா
தூக்கியெறியப்படும்
இரையைக் கூட
கவண்கல்லாகவே நினைக்கும்
ஆளரவமற்ற வீதி
ஊருக்கு அந்நியமாக
நம்மை உணர வைக்கும்
கையிலேந்திய விளக்கு
இருளைக் கிழித்து
ஒளியைப் பரப்பும்
வெளிச்சம் காட்டும்
சுடரொளி தான்
வீட்டையும் எரிக்கும்.
சுடரொளி
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ப.மதியழகன்
- கடவுள் இறந்துவிட்டார் - நீட்சே (05 ஜூலை 2021)
- நான் கடவுளல்ல போராளிகள் கைகளிலிருக்கும் ஆயுதம் – அம்பேத்கர் (29 ஜூன் 2021)
- நானொரு நாத்திகன் – பகத்சிங் (25 ஜூன் 2021)
- தோழர் ஜீவானந்தம் – தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களின் பிதாமகன் (10 ஜூன் 2021)
- காரல் மார்க்ஸ் - உலகத்தின் இரண்டாவது சூரியன் (04 ஜூன் 2021)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.