பரிதியை மேகம்
மறைத்திடும் நேரம்
மழை வரக்கூடும்
பூவிதழ்களின் மேலே
வண்டுகள் அமர்ந்து
ரீங்காரம் பாடும்
விடியலில்
குயில் தனியாய் அமர்ந்து
தனிமையை அருந்தும்
நெல்மணிகளைத் தின்னும் புறா
தூக்கியெறியப்படும்
இரையைக் கூட
கவண்கல்லாகவே நினைக்கும்
ஆளரவமற்ற வீதி
ஊருக்கு அந்நியமாக
நம்மை உணர வைக்கும்
கையிலேந்திய விளக்கு
இருளைக் கிழித்து
ஒளியைப் பரப்பும்
வெளிச்சம் காட்டும்
சுடரொளி தான்
வீட்டையும் எரிக்கும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கவிதைகள்