NILAVU

மின்சாரம் தடைப்பட
முற்றத்திற்கு வந்து
முகத்தை நிமிர்த்தி
மேலே பார்கிறேன் !

தென்னங்கீற்று வழியே
தெரிந்த நிலவொளியும்
நிரை முகிலும்
என்னை ஏதேனும் எழுது
என்று சொல்வதுபோல் இருந்தது.

நிலவின் முகக்கறையாய்
நீண்ட யுத்தத்தால்
சிதைந்துபோன எம் நிலமும்

சிதறி ஓடும் முகில்களாய்
கலைந்துபோன எம் உறவுகளும்
நினைவில்வர நிறுத்துகிறேன்
எழுதுவதையும் ...................யும் . 

- வாசம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.