இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!

நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!

இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..

இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!!

-‍ மணவை அமீன்

More articles by மணவை அமீன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.