பக்கத்து வீடு பற்றியெரிந்த போது
நாம் அமைதிப் பூங்காவில்
பூப்பறித்துக் கொண்டிருந்தோம்

பணம் கொடுத்து ஓட்டுகள்
வாங்கப் பட்டபோது
பதறவில்லை

வருமானம் மானம் எதுவும் உயர
வழியில்லாதவர் விதியை மட்டும்
நொந்து திரிகிறார்

மாற்றமின்றி தோழா!
இந்தத் தைத் திங்களிலும்
பால் மட்டுந்தான் பொங்கி எழும்

Pin It