உறவு முறிந்ததும் 
சருகாகிப்போன 
இலை.... 
அந்தரத்தில் அகதியாய் 
தரை நோக்கி 
புதை நிலம் தேடி...... 

தொட்ட மண் 
சுட்டதேன்..? 
தரையெங்கும் தார்பூச்சு... 
அழுக்கு அண்டம், 
கலவைக் காற்று, 
கைக்கெட்டிய நிலத்தையும் 
உடல் ஒட்டவிடாமல் தடுத்த 
கண்ணாடிக்காகிதம்... 

இயற்கைச்சக்கரம் 
சதுரமாய்....

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.