நடுங்கும்
உன் விரல்களைப் பற்றும்
விருப்பமில்லை மழைக்கு

காற்றில் வலு கூடிய குளிர்ந்த ஈரம்
கடலின் அலையிலிருந்து
உப்புத் துளிகளைச் சுமந்து விசிறும்போது

உன்
உதடுகளில் விழுகிறது
முதல் முத்தம்

பிறகு
நிலவின் நிறம்
மஞ்சளாக உருகி
நீரின் விளிம்பில் பதுங்கிட

உன்
விரல்களைப் பற்றும்
விருப்பமில்லை கடலுக்கும்

நடுங்காதே..!

****

- இளங்கோ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.