கடவுளின்
வியர்வைத்துளி தான் சாத்தான்
என்ற
விவாத இரவுக்கு பின்
என் நாவில்
அவன் உப்புக் கரிக்கிறான்
மனதில் முட்களாய் முளைக்கிறான்
கனவின் படுதாவை உதறிப் பிய்க்கிறான்
என்
சமவெளியெங்கும்
சுவர்கள் எழுப்பி
அதில் தன் எச்சில் கொண்டு
வர்ணம் பூசுகிறான்..
சாத்தான் இடையறாது உழைக்கிறான்
அவன் உடலில்
பெருகும் வியர்வைத்துளியில்
கடவுள் மின்னும்போது..
வானம் இடிய சிரிக்கிறான்..
****
- இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வானம் மேயும் வெளிச்சம்
- வரப் போகும் தேர்தல்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்