பல்லிகளை நேசிப்பது குறித்து
என் விடுதி அறைகளிலிருந்துதான்
நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்

விடுமுறை முடிந்து
அறைக்குள் திரும்பும்போது
எல்ல இடங்களிலும்
அதன் கால் தடயங்கள்

சுவற்பல்லிகள்
சப்தம் எழுப்பும்போதெல்லாம்
பாட்டியின் உச்சுகொட்டும் சப்தம்
என் அறை முழுவதும் வழிந்து நிரம்பி
அவளை ஞாபகப்படுத்தும்

உச்சந்தலையில் விழுந்தால்
உடன் மரணமென்ற
அப்பாவின் அசைக்கமுடியாத
ஆயுட்கால நம்பிக்கையை
பொய்யாக்கி இருக்கிறது
எல்லா சமயங்களிலும்

மனிதர்களின் சகுனங்களை
தீர்மானிக்கும் பல்லிகளின்
மரணத்தை
கதவிடுக்கிலோ
அடுக்களை பரணிலோ
ஜன்னல் ஒரங்களிலோ
கொதி நீரிலோ
தீர்மானம் செய்வதென்னவோ
மனிதர்கள்தானே?

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.