கூட்டிப் பெருக்கிய
அலுவலகத் தரையில்
எச்சில் துப்புவதில்
துவங்குகிறது எங்கள் கலகம்.
உங்கள் மனைவியுடனான
யாத்திரையில்
எங்கள் தெருவோரப் புணர்ச்சி
பெரும் இடையூறு.
எங்கள் வளர்ப்புப் பன்றிகளின்
மலமொட்டிய வாயினின்று
வந்தமரும் ஈக்களை
என்ன செய்யப் போகிறீர்கள்?
அடித்த சாராயத்தில்
அவிழ்ந்து விழும் கைலி தாண்டி
உள்ளாடையற்ற உறுப்புகளை
திட்டிக்கொண்டே மேயும்
உங்கள் மனைவிமார்களின்
கண்களுக்குப் புண்ணியம்.
ஒருநாள்
எதிரெதிர் நேரலாம்
உங்கள் சாமி ஊர்வலமும்
எங்கள் சவ ஊர்வலமும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- அன்புச்செல்வன்
- பிரிவு: கவிதைகள்