ஈரம் காயாத கடற்கரை மணலில்
பதிந்த கால் தடம் போல
என் உள்மனதின் சுவடாக
நீ நிறைந்திருக்கிறாய்,
நான் விரும்பாவிட்டாலும் கூட....!
-
பொங்கி நுரைக்கும் பெருங்கடலின்
அடியாழத்து மீன் கூட்டம்
நெளிந்து நீந்தி இசைக்கின்ற
ஏக்கம் நிறைந்த பாடலொன்று
அலையாக மிதந்து
எதிர்பார்ப்பின் துகள்கள் பரப்பிய
கரையின் நீட்சியில்
இலக்கற்று பாவும்
என் துவண்ட கால் விரல்களை
நக்கி ஈரப்படுத்துகிறது...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.