சாரட் வண்டிகள் சாதாரணமானவை கிடையாது. அதற்குள் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க வெறி ஆழ்துயில் நிலையில் எப்போதும் இருக்கின்றது. அது அவ்வப்போது கண்விழித்து, மறைந்து போன தன் கடந்த காலத்தை எண்ணி, விம்மிப் பொருமுகின்றது. வழி நெடுக கைகட்டி நின்று கூழைக் கும்பிடு போட்ட அடிமைகளும், மன்னர் வாழ்க, எசமானர் வாழ்க, ஜமீன் வாழ்க, துரை ஐயா வாழ்க என்று காலந்தோறும் காற்றில் ஒலித்த கோஷங்களும் இன்றி, சாரட் வண்டிகள் நிசப்தமாக நின்று கொண்டிருக்கின்றன. மீண்டும் தன் பழைய காலத்திற்குச் செல்ல ஏதாவது கால எந்திரம் கண்டுபிடிக்கப்படும் என அசைக்க முடியாத நம்பிக்கை சாரட் வண்டிகளுக்கு உள்ளது. தன்னிடம் இருந்து முன்நோக்கி பல தசாப்தங்கள் ஓடிவிட்ட வரலாற்றைப் பின்நோக்கி இழுக்க, பிரம்மன் தன்னுடைய தலையில் இருந்தோ, தோல்பட்டையில் இருந்தே, தொடையில் இருந்தோ பாதத்தில் இருந்தோ யாரையாவது பெற்று அனுப்புவான் என்று அவை காத்துக் கிடக்கின்றன.
சாமானியர்களால் ஒருநாளும் மன்னராகவோ, ஜமீனாகவோ, துரையாகவோ ஆக முடிவதில்லை. ஆனால் அவர்கள் மன்னர்களாக, ஜமீன்களாக, துரைகளாக கூத்துக் கட்ட எந்தத் தடையும் இல்லை. கூத்தில் மீசையை முறுக்கலாம், கர்ஜிக்கலாம், சிரச்சேதம் செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம், வாள் எடுக்கலாம், சவுக்கால் விளாசலாம், வெட்டி வீழ்த்தலாம். மக்கள் கைதட்டி ஆராவரிப்பார்கள். விடிந்ததும் இருளோடு சேர்ந்து ஆதிக்கத்தை அடையாளப்படுத்தும் ஆடைகளும் களைக்கப்பட்டு விடும். கூத்தில் வேடமிடும் மன்னனுக்கும், நிஜ மன்னனுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் எப்பொழுதும் நன்றாக உணர்ந்தே வைத்திருப்பார்கள். இருந்தாலும் எளிய மக்களால் எளிதில் அணுக முடியாத அவர்களை கூத்தில் பார்த்து ரசிப்பதில் குடிகளுக்கு மகிழ்ச்சி இருக்கவே செய்கின்றது. அந்த மகிழ்ச்சிதான் திரும்பத் திரும்ப கூத்து நடத்தும்படி கூத்தாடி மன்னர்களையும், ஜமீன்களையும், துரைமார்களையும் தூண்டிக் கொண்டே இருகின்றது. காலம் கடந்து போனாலும் மக்களின் மனங்களில் மன்னர்களும், ஜமீன்களும், துரைகளும் இன்னும் ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் கனவுகளில் அடிக்கடி சாரட் வண்டிகளில் வரும், அவர்களின் முன் மண்டியிட்டு மக்கள் தங்களின் விசுவாசத்தைக் காட்டுகின்றார்கள். சாரட் வண்டிகள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.
மன்னர்களும், ஜமீன்களும், துரைகளும் ஒழிந்த இந்த ஜனநாயக காலத்தில் சாலைகளில் சாரட்டைப் பார்க்கும் போதெல்லாம் அது ஏதோ அந்நியப்பட்டு, தனது சுய ஆதிக்கத்தை விளம்பரப்படுத்த, கல்லாப்பெட்டி பெருத்த கனவான்கள் செய்யும் தந்திரமாகவே படுகின்றது. குப்பை மேடுகளிலும், சாக்கடையின் ஓரங்களிலும், வாழத் தகுதியற்ற இடங்களிலும் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டை மிரட்சியுடன் பார்க்கின்றார்கள். அது ஏதோ வானத்தில் இருந்து இந்த மண்ணைப் பார்க்க வந்த தேவதூதுவர்களின் வாகனம் போல் அவர்களுக்கு உள்ளது. அதைப் பார்க்கும் போதே அவர்களின் மூளை, ஓடிச்சென்று அந்தச் சாரட்டின் முன் தெண்டனிட்டு வணங்கு, அது உன்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்ட பரம்பரையின் வாகனம் என்று கட்டளை போடுகின்றது.
சாரட்டில் பயணிப்பது ஒன்றும் அவ்வளவு பாவமான செயலல்ல என்பது உண்மைதான். ஆனால் சாரட்டில் பயணித்த பல பேர் மக்களின் உழைப்பில் வயிறு வளர்த்த மக்கள் விரோதிகளாகவே கடந்த காலத்தில் இருந்தனர். சாரட் ஒரு ரயிலைப் போலவோ, பேருந்தைப் போலவோ எளிய மக்களை ஏற்றிச் செல்லும் வாகனமாக என்றுமே இருந்ததில்லை. அது வல்லாதிக்கத்தின் குறியீடாகவே இருந்து வந்தது. சாரட்டில் பூட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கையும், அதன் சாதியும் அதை வைத்திருப்பவனின் அந்தஸ்த்தை பிரதிநிதித்துவப்படுத்துபவை.
எளிய மனிதர்களுடன் எளிய மனிதர்களாக வாழுபவர்கள் ஒருநாளும் தன்னை அவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டும் எதையும் பயன்படுத்த விரும்பவதில்லை. அக்டோபர் 23, 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் மாகாணத் தனி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு அண்ணா தலைமையேற்க பெரியார் சம்மதம் தெரிவித்து இருந்தார். மாநாடு தொடங்கியதும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அண்ணாவும், முக்கியத் தலைவர்கள் சிலரும் அமர்ந்து கொண்டனர். ஊர்வலம் தொடங்கியது. ஆனால் சாரட் வண்டியில் பெரியார் அமரவில்லை. கறுப்புச் சட்டை, இடுப்புத்துண்டு, கைத்தடியோடு ஊர்வலத்தில் நடந்தே வந்தார். அதுதான் பெரியார். மற்றவர்களின் வற்புறுத்தலால் சாரட்டில் பயணிப்பதற்கும், விருப்பப்பட்டு பயணிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சுயமரியாதையையும், சமத்துவத்தையும் உறுதியாக ஏற்றுக்கொண்டவர்கள் ஒருநாளும் விருப்பப்பட்டு அதில் பயணிக்க மாட்டார்கள்.
நம்மிடம் அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கலாம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட சிலரும் பெரும் சொத்துடைய நபர்களாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தொண்டர்களும் அப்படி செல்வச் செழிப்பில் இருப்பவர்களாக நினைத்து, அவர்கள் முன் தம் மேட்டுக்குடி மிதப்பைக் காட்ட நினைப்பவர்கள் வெகு விரைவில் அந்தத் தொண்டர்களின் மனங்களில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். பொது வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர்கள், எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள், அந்த எளிய மக்களின் வாழ்வியலைப் போலவே தம்முடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சாமானிய மக்களிடம் அனைவரையும் சமமாகப் பார்க்கும் பார்வை இன்னமும் வந்துவிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் இன்னமும் முதலாளிகளையும், அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் பார்த்தால் கூழைக்கும்பிடு போடுபவர்களாக உள்ளார்கள். அவர்களிடம் உங்களின் உபரி உழைப்பைத் திருடிய கொள்ளைக்காரன் தான் முதலாளி என்பதையும், அதிகார வர்க்கத்தினர் அனைவரும் உங்களுக்கு சேவை செய்ய உங்களின் வரிப்பணத்தில் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களை தட்டிக் கேட்க உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்பதையும் அழுத்தமாகப் பதிய வைப்பதுதான் நம்முடைய பணி.
அப்போதுதான் தன்னை அழிக்கத் துடிக்கும் அனைத்து அதிகாரத்திற்கு எதிராகவும் மக்கள் போராடுவார்கள். அதைவிட்டுவிட்டு அவர்கள் மனங்களில் இருக்கும் அடிமைச் சிந்தனைக்கு உரம் இடுவது போல் நடந்து கொள்வது நிச்சயம் பகுத்தறிவு ஆகாது. பெரும் ஆடம்பரத்தைக் காட்டி மக்களை மயக்கும் பிற்போக்குவாதிகள்தான் தங்களை மக்கள் பிரமாண்டமாக ஒரு அரசனைப் போல நினைக்க வேண்டும் எனச் செயல்படுவார்கள். சுயமரியாதையை கற்றுக் கொடுப்பவர்கள் ஒரு பிரம்மம் போல சாரட் வண்டிகளில் மீது அமர்ந்துகொண்டு கீழே இருப்பவர்களைப் பார்க்க விரும்பமாட்டார்கள். அப்படி நினைப்பதைக் கூட அவமானமாகக் கருதுவார்கள். வாழ்நிலைதான் நம்முடைய சிந்தனையைத் தீர்மானிக்கின்றது என்பார் மார்க்ஸ். நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோமோ அப்படித்தான் நம்முடைய செயல்களையும் அமைத்துக் கொள்வோம். வெள்ளைச் சட்டையில் அழுக்கு ஏற்பட்டால் உடனே தெரிந்துவிடும். ஆனால் கறுப்புச்சட்டையில் அழுக்கு ஏற்பட்டால் அது பார்ப்பவர்களின் கண்களுக்கு உடனே தெரியாது. ஆனால் தூய்மையை விரும்புவர்கள், யாருக்கும் தெரியாதே என்பதற்காக அழுக்கை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். சாரட் வண்டிகள் ஒரு நாள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம் பின்னால் அணிதிரண்டவர்கள், அடுத்த தலைமுறைக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாமும் ஒருநாள் இதுபோல சாரட் வண்டியில் பயணிக்க வேண்டும் என்று விரும்பிவிட்டால்? பாடுபட்ட அனைத்துமே நாசமாகி விடுமே!
- செ.கார்கி
இக்கட்டுறை எதை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளத ு என்பதை அனைவரும் அறிவார்கள். திரு. வீரமணிக்கு மாணவர்கள் அளித்த வரவேற்பின் intellectual' வயிற்றெரிச்சலே இதற்கு காரணம்.. ஆனால் அந்த நிகழ்ச்சியினை குறிப்பிட்டு எழுதக்கூட ஒரு அறிவு நேர்மை இல்லாத செயல் இது.இதற்கு முற்போக்கு முகமூடி வேறு ...நொட்டை சாக்குகள், விளக்கங்கள் என இதைப் படிப்பதே ஒரு தண்டனை..
திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் ஆசிரியர் வீரமணி சாரட் வண்டியில் பயணித்த செய்தி குறித்து விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் யார் விமர்சனம் செய்கிறார்கள்? ,விமர்சனம் எப்படிபட்டது ?அது எதை நோக்கியது ?போன்ற காரணிகளே அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அதற்கு எதிவினையாற்றவோ தூண்டுகின்றன. முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன்.. ஆசிரியர் வீரமணி சாரட் வண்டியில் பயனித்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இல்லையா? என்று தட்டையாக கேட்டால் 80 % ஏற்றுக் கொள்கிறேன் என்பதே எனது பதில். அதுவே அவர் தவித்துவிட்டு ஒரு மாணவியை அந்த சாரட் வண்டியில் ஏற்றி தான் நடந்து வந்திருப்பாரேயா னால் 100% அதை ஏற்று வாழ்த்துப்பா பாடியிருப்பேன். ( முதல் பதிலில் உள்ள மீதம் 20% -கான காரணமும் இதுவே) .சரி.. சாரட் பயணத்தை விமர்சிக்கும் தினமலர், தினமனி வகையராக்களின் நோக்கம் மிக தெளிவானது. அது வன்மம் சார்ந்தது. ஆக்கப்பூர்வமானத ு வேறு எதுவும் இல்லை.ஆனால் பகுத்தறிவு பாதையில் பயணம் செய்யும் சில தோழர்களின் சாரட் பயணம் குறித்த பார்வை மிகுந்த எரிச்சலூட்டுவதா க உள்ளது. ஏனெனில் அதில் ஆக்கப்பூர்வமாக ஒன்றும் இல்லாமல் வெறுமனே பயணத்தைப் பற்றி மட்டுமே வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக உள்ளது.தோழர் கார்கி அவர்களின் கட்டுறை அவ்வாறான ஒன்று என்பது எனது கருத்து. ” “
“ அது வல்லாதிக்கத்தின ் குறியீடாகவே இருந்து வந்தது. சாரட்டில் பூட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கையும், அதன் சாதியும் அதை வைத்திருப்பவனின ் அந்தஸ்த்தை பிரதிநிதித்துவப ்படுத்துபவை.” மிகச் சரி. ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. மகுடம் சூட்டுவது , வாள் பரிசளிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்றவற்றையும் இது போன்றே விமர்சிக்கலாம். எளிய மக்களுக்கு இவையும் கனவுகளே.கும்பகோ ண நிகழ்ச்சி குறித்து விமர்சிப்பதாக இருந்தால் அது எதற்காக நடந்தது, எப்படி நடந்தது, என்ன என்ன தீர்மானங்கள் இயற்றப்பட்டன.. அது குறித்தெல்லாம் பேசி விட்டு சாரட் பயணத்தையும் விமர்சித்து இருந்தால் நமக்கு கேள்வியே இல்லை. ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் சாரட் பயணம் சென்றதினால் மொத்தமும் கெட்டுவிட்டதைப் போல ஒரு வியாக்காணம் எதற்கு என்று கேட்கிறேன்.
”அக்டோபர் 23, 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் மாகாணத் தனி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு அண்ணா தலைமையேற்க பெரியார் சம்மதம் தெரிவித்து இருந்தார். மாநாடு தொடங்கியதும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அண்ணாவும், முக்கியத் தலைவர்கள் சிலரும் அமர்ந்து கொண்டனர். ஊர்வலம் தொடங்கியது. ஆனால் சாரட் வண்டியில் பெரியார் அமரவில்லை. கறுப்புச் சட்டை, இடுப்புத்துண்டு , கைத்தடியோடு ஊர்வலத்தில் நடந்தே வந்தார். ”
ஏன் ?
இதற்கான விடையை அடுத்த வாக்கியத்தில் தோழர் தருகிறர்.
“ அதுதான் பெரியார்.”
அது மட்டுமல்ல அதனால்தான் அவர் பெரியார்.
ஆனால் பெரியார் சாரட் பயணம் ஆதிக்கத்தின் குறியீடு .எனவே அனைவரும் கீழே இறங்குங்கள்.. குதிரையை பத்தி விடுங்கள்.. வண்டியை எரித்து விடுங்கள் என்று சொல்லவில்லை.. அவருக்கு தெரியும் ஏற்பாட்டாளர்கள் ஆர்வ மிகுதியில் செய்தது என்று. அவர் அதை பெரிதுபடுத்தவில ்லை. மேலும் அண்ணவை அதில் அமரச்செய்தார். அனைவரும் மகிழ்ந்தனர். இதில் என்ன தீங்கு வந்து தொலைத்துவிட்டது.
இதைப் போலவே கும்பகோணத்திலும ் இளம் மாணவர்கள் தங்கள் தலைவரை உற்சாகமாக வரவேற்க சாரட் வண்டியை ஒரு கருவியாக பயன்படுத்தினார் கள். ஆசிரியரும் பயணம் செய்தார். இதில் என்ன வந்துவிட்டது.
” சுயமரியாதையையும ், சமத்துவத்தையும் உறுதியாக ஏற்றுக்கொண்டவர் கள் ஒருநாளும் விருப்பப்பட்டு அதில் பயணிக்க மாட்டார்கள்.”
இந்த வரி எவ்வளவு விசமத்தனமானது .. திரு. வீரமணியா இப்படி ஏற்பாடு செய்ய சொன்னார். சாரட் வந்தால்தான் பயனிப்பேன் என்று அவர் சொன்னதற்கு கட்டுரையாளர் சான்று வைத்துள்ளாரா? தினமலமும் தினமனியும் செய்ய வேண்டியதை இவர் ஏன் செய்ய வேண்டும்.
ஆக ஒரு எளிய விசயத்தை பெரிது படுத்தி வேவையில்லாத நொட்டை விளக்கங்களை கொடுத்து எழுதப்பட்ட இந்த கட்டுறையை என்னவென்று சொல்ல?
மேலும் திரு அகரன் என்பவர் அளித்துள்ள பின்னூட்டம் குறித்டும் சொல்லிவிடுகின்றேன்.
“தமிழகத்தில் ஹிந்துத்துவ கும்பல் , தமிழர்களுக்கு எதிராக பம்பரம் போன்று செயல் பட்டு வரும் தருணத்தில், தி க அதில் நூற்றில் ஒரு பங்கு கூட தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பது கிடையாது. இன்னும் தி க, திமு க வுக்கு முட்டு கொடுப்பவர்கள் ஏதன் அடிப்படையில் முட்டு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.”
பெரியார் மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று சொன்னார்.
எனவே இந்து மதம், ஆர்.எஸ்.எஸ்., பார்பணியம் , சாதி போன்றவற்றிற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமை மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உண்டு. அது ஏதோ தி.க. மற்றும் தி.மு.க விற்கு மட்டும் உள்ள கடமை அல்ல.
நீங்கள் சொல்லும் “ தமிழர்” கள் சாதிமான்ளாக இருப்பதால் அவர்கள் சாதி விட்டு மனிதர்களாக மாறவே தி.க போராடும். எனவேதான் அது 1% ற்கும் குறைவாக செய்தாலும் அதற்கு முட்டு அல்ல அதை தலை மேல் தூக்கி வைக்கிறோம்.இந்த பணியை வேறு எவரும் செய்ய முன் வருவார்களேயானால ் அவர்களையும் அவ்வாறே கொண்டாடுவோம்.
சத்திரியன் தான் தேரில் ஏற வேண்டும்
என்கிற ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்பை
சாரட் வண்டியில் ஏறிக் காட்டுவோம்.
பல்லக்கு தூக்குவதையும் ஏறுவதையும் திராவிடம் ஏற்கவே ஏற்காது. சாரட்டுக்கு என்ன ? செய்வோம்
எப்போதும் இல்லை என்றாலும் விரும்பிய போது செய்வோம்.
அண்ணல் அணிந்த கோட்,
எழுச்சி தமிழர் திருமா பெற்ற பரிவட்டம்
ஆசிரியர் வீரமணி வந்த சாரட் வண்டி
இவை எல்லாம் ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்பின் குறியீடுகள் தான்.
இன்றைக்கு எல்லோரும் தோளில் அணிகிற துண்டே திராவிடத்தின் வெற்றியின் குறியீடு தான்.
சினிமாவில் மட்டும் தான் குறியீடு காட்டவேண்டுமா ?
சாந்தி நாராயணன்
"வீரமணி அவர்கள் சாரட் வண்டியில் சென்றது சுயமரியாதை செயல் இல்லை" என சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது.
"இளைஞர்களின் மாநாடு, தீர்மானத்தை பற்றியும் எழுதுங்கள்" என்று கேட்பதை ஏன் கருத்தில் கொள்ள மாட்டேன் என்கின்றீர்கள்! ?
RSS feed for comments to this post