சாதி வெறியர்களால் துள்ளத் துடிக்க அந்த இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் இன்னும் குருதிக் கறை கூட முழுதாய்ப் போயிருக்காது. அந்தப் பெண் கௌசல்யா இன்னும் மருத்துவமனையிலிருந்து திரும்பக் கூட இல்லை. கௌரவத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இழிசெயலுக்கு எதிரான கண்டனக் குரல்கள் கூட இன்னும் ஓயவில்லை. அதற்குள் வெட்கமே இல்லாமல் விவாதிக்கிறார்கள் பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள் பற்றி! எப்படி முடிகிறது!...
கேட்டால் இவர்கள் படித்தவர்களாம்! அதனால் படித்தவரான, இளைஞர் பார்வையோடும் சீரிய திட்டமிடலோடும் எல்லாவற்றையும் அணுகுகிறவரான அன்புமணிக்கு வாக்களிக்க விரும்புகிறார்களாம். தெரியாமல்தான் கேட்கிறேன், அப்படியானால் நம்மோடு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்ப் பாதுகாப்பு குறித்து உங்களுக்கெல்லாம் எந்த அக்கறையுமே கிடையாதா படித்த பெருமக்களே? தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்று வேண்டும்தான்; அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால், அந்த மாற்று யார், அன்புமணி இராமதாசா? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக இராசபக்சவைக் கொண்டு வந்து நிறுத்தினால் வாக்களிக்க முடியுமா என்ன?
அதற்காக நடந்த அந்தக் கொலையைப் பா.ம.க-வினர்தான் செய்தார்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை விடவும் சாதிய மனப்பான்மை குறைந்த தமிழ் மண்ணில் இன்று சாதி ஆணவக் கொலைகளெல்லாம் இப்படிப் போகிற போக்கில் நடத்தப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம், பா.ம.க அப்படிப்பட்ட வழக்கத்துக்கு ஊக்கம் கொடுத்து உரமேற்றி வளர்த்ததுதான் என நான் சொன்னால் உங்களில் யாராவது அதை மறுக்க முடியுமா நண்பர்களே?
இப்பொழுது நடந்த சங்கர் கொலை ஒருபுறம் இருக்கட்டும். திவ்யா-இளவரசன் திருமணத்தை எதிர்த்து தருமபுரியில் இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் மறந்துவிட்டதா? அதையொட்டி நடந்த இளவரசன் கொலை, மரக்காணக் கலவரம் போன்றவைதாம் மறக்கக்கூடியவையா? அல்லது சித்திரை முழுநிலவுப் பெருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்கள் விடுத்த வெளிப்படையான மிரட்டல்களைத்தாம் மறந்துவிட்டீர்களா?
நீங்கள் கேட்கலாம், “பா.ம.க மட்டும்தான் சாதிக் கட்சியா? இன்னும் எத்தனையோ சாதிக் கட்சிகள் நாட்டில் இல்லையா? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்களை மட்டும் ஏன் இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்?” என. உண்மை! நாட்டில் இன்னும் நிறையவே சாதிக் கட்சிகள் உள்ளன. ஆனால், இதுவரை எந்த சாதிக்கட்சித் தலைவனாவது தன்னை ‘சாதி வெறியன்’ எனப் பெருமையோடு அறிவித்துக் கொண்டு பார்த்திருக்கிறீர்களா? நடத்துவது சாதிக் கட்சியாகவே இருந்தாலும் பொதுவெளியில் யாருமே அப்படி ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால், ஊரறிய உலகறிய “ஆம்! நான் மருத்துவனாக இருந்தபோதும் சரி, கட்சி தொடங்கியபோதும் சரி, எப்போதுமே நான் சாதி வெறியன்தான்!!” என வெளிப்படையாக அறிவித்தவர் இராமதாசு.
அது மட்டுமில்லை, மற்ற சாதிக்கட்சியினர் எல்லாம் அவரவர் சாதியினரைத் திரட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் (அதுவே இழிவானதுதான்). ஆனால், ஆதிக்க சாதியினர் அனைவரையுமே ஓரணியில் திரட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் ஓர் அமைப்பைக் கட்டமைப்பது என ஏதோ திரைப்படங்களில் வருவது போல வானளாவிய அளவுக்கு சாதியத்தைக் கொண்டு செல்லும் பேரபாயகரமான முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டிருப்பது பா.ம.க மட்டும்தான்.
மேலும், சாதியத் தாக்குதல் ஏதாவது நடந்தால், உள்ளத்தளவில் இல்லாவிட்டாலும் உதட்டளவுக்காவது, நாகரிகத்துக்காகவாவது அதைக் கண்டித்து அறிக்கை விடுவதுதான் இதுவரை மற்ற சாதிக் கட்சித் தலைவர்கள் கடைப்பிடித்து வரும் வழக்கம்.
ஆனால், செய்தியாளர்கள் “உடுமலையில் நடந்த கௌரவக் கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று அவர்களாகவே முன்வந்து கேள்வி எழுப்பியும் “இதுவரை எத்தனையோ முதன்மையான விதயங்கள் சொல்லியிருக்கிறேன். முதலில் அதைப் போடுங்கள்” என்று திமிராகச் சொல்லி விட்டு எழுந்து போனவர் இராமதாசு! இன்னும் இவரோ, இவர் மகனோ ஒருமுறை கூட முதல்வர் ஆகவில்லை. ஆளுங்கட்சியில் பங்குதான் வகித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்பொழுதே, அதுவும் தேர்தலை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொண்டே இவர்கள் சாதியையும் சாதி வெறியையும் இந்த அளவுக்குப் பச்சையாக ஊக்குவிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு அன்புமணி முதல்வராகவும் நாம் வாக்களித்தால்?...
இன்றைய நிலைமையிலேயே இவர்களால் ஆதிக்க சாதிகள் அனைத்தையும் இந்த அளவுக்கு ஒருங்கிணைக்க முடிகிறது என்றால், இவர்களே நாளை ஆட்சிக்கும் வந்து விட்டால்?...
இதுவரை இவர்கள் சாதி வளர்த்ததற்கே ஊர் பார்க்க உலகம் பார்க்க, படப்பிடிப்புக் கருவி பார்க்க ஒருவனை நடுத்தெருவில் போட்டு வெட்டிச் சாய்க்கிறார்கள் என்றால், இன்னும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இவர்கள் சாதி வளர்க்கத் தொடங்கினால்?... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! காதலை எவனாவது, எவளாவது வாய் திறந்து சொல்ல முடியுமா?... பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஒருவராவது தெருவில் அச்சமின்றி நடக்க முடியுமா?...
இப்படி மண்டைக் கொழுப்பெடுத்துத் திரியும் ஒரு கொலைகாரக் கும்பலுக்கு வாக்களிக்கப் போவதாக வெட்கமில்லாமல் தொலைக்காட்சியில் வந்து சொல்லத்தான் நாம் படித்திருக்கிறோமா? போயும் போயும் சாதிப் பாகுபாடு என்பது என்னய்யா? உடல் ஊனம், ஏழ்மை, நிறம் போன்ற காரணங்களின் அடிப்படையில் ஒருவரை மட்டம் தட்டுவதோ மதிப்பிடுவதோ எந்த அளவுக்கு இழிவான செயலோ அதே போன்றதுதான் சாதி அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவதும், மட்டம் தட்டுவதும். இப்படிப்பட்ட கீழ்த்தரத்திலும் கீழ்த்தரமான நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது எப்படிப் படித்தவர்களின் செயலாக இருக்க முடியும்?...
தனிமனித அடிப்படை உரிமையான காதலை எதிர்ப்பது, சமூகப் பாகுபாட்டுக்குத் (Discrimination) தலையாய காரணியாக விளங்கும் சாதியத்தை ஆதரிப்பது போன்ற அருவெறுப்பான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு கட்சி எப்படி நாகரிக இளைஞர்களின் தேர்வாக இருக்க முடியும்?...
தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்களுள் ஒன்று காதல். அதற்கு எதிராய் ஆயுதம் தாங்குகிற இவர்களுக்கு வாக்களிப்பவர் எப்படி உண்மையான தமிழராய் இருக்க முடியும்?...
வாழ வேண்டிய இளமனங்களை பிரித்து, கொன்று கூறு போடுகிற இரக்கமே இல்லாத செயலை இப்படிக் கூச்சமே இல்லாமல் ஊக்குவிக்கிற, மனிதநேயத்துக்கே எதிரான கட்சியினருக்கு மனிதராய்ப் பிறந்த ஒருவர் எப்படி வாக்களிக்க முடியும்?... அப்படிச் செய்தால், தமிழர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன; நல்லாட்சி கிடைத்தால் போதும் என இராசபக்சவுக்கு வாக்களிக்கும் சிங்களக் காடையர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?
ஏன் பா.ம.க-வுக்கு வாக்களிக்கக் கூடாது? சாதிக்கு அப்பாலும் சில காரணங்கள்
சரி, பா.ம.க மீது சாதி தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலாவது பா.ம.க உண்மையிலேயே நல்ல கட்சிதானா?
பா.ம.க-வுக்கு வாக்களிக்கலாம் எனப் பரிந்துரைப்பவர்கள் அதற்குக் காட்டும் முதன்மையான காரணம், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பது. அட அறிவுப் பழங்களே! அரசியலுக்கு வந்த புதிதில், இதே சென்னை, தேனாம்பேட்டை நாட்டுமுத்துத் தெருவில் அலுவலகம் - வீடு இரண்டையும் ஒரே கட்டடத்தில் நடத்திக் கொண்டிருந்த அன்றைய இராமதாசு எங்கே? இன்று தைலாபுரத்தில் பெரிய பண்ணை வீட்டில் அரச வாழ்வு வாழும் இராமதாசு எங்கே? எத்தனை இடங்களில் திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், எப்பேர்ப்பட்ட படாடோப வாழ்க்கை!... இவற்றுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?
பயணச்சீட்டு வாங்கக் கூடக் காசில்லாமல் கள்ளத் தொடர்வண்டி ஏறிச் சென்னைக்கு வந்த கருணாநிதிக்கும், வெறும் திரைப்பட நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கும், பட்டியலிட்டால் படித்து மாளாத அளவுக்கு இவ்வளவு மலை மலையான சொத்துக்கள் எப்படி வந்தனவோ அதே வழியில்தான் இராமதாசுக் குடும்பத்துக்கும் இந்தச் சொத்துக்கள் வந்தன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! இராமதாசு மீதோ அன்புமணி மீதோ ஊழல் வழக்கு ஏதும் இல்லாமல் இருக்கலாம். அதற்காக?... அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி மீது கூடத்தான் குற்றச்சாட்டு இல்லை. அதற்காக அதை அவர் செய்யவில்லை என ஆகி விடுமா?
அதை விடுங்கள்! மேலாண்மை (நிர்வாகம்) வசதிக்காகத் தமிழ்நாட்டையே இரண்டாகப் பிரிக்க வேண்டும் என வலியுறுத்துபவர் இராமதாசு. இப்படிச் செய்தால், வன்னியர்கள் மிகுதியாக வாழும் பகுதி மட்டும் தனி மாநிலமாகக் கிடைக்கும்; தாங்கள் எளிதில் ஆட்சிக்கு வரலாம்; அந்த மாநிலத்தில் நிரந்தரமாக ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது அவர் கணக்கு. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் ஆட்சி அமைய வேண்டி இவர்களுக்கு வாக்களித்தால் முதலில் அதுதான் நடக்கும். ஈழப் பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, மீத்தேன் திட்டம், அணு உலைத் திட்டம், நியூட்ரினோ திட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சினை எனத் தமிழ் இனத்தையே தடம் தெரியாமல் அழிக்கும் அளவுக்குச் சுற்றிலும் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் வேளையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டை இரண்டாகக் கூறு போட்டால் அதை விடப் பெரிய பின்னடைவு வேறு இருக்க முடியுமா என்பதைச் சிந்தியுங்கள்!
தவிர, நாளுக்கு நாள் கடுமையாகி வரும் இந்தத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தாங்கள் செய்யப் போவது என்ன, இவை குறித்துத் தங்கள் நிலைப்பாடு என்ன என்பது பற்றிப் பா.ம.க-வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலும் இல்லை; வண்டலூரில் நடந்த அவர்கள் கட்சி மாநில மாநாட்டில் புதுமைச் சொற்பொழிவு நடத்திய அன்புமணி இந்தப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவும் இல்லை. சொல்லப் போனால், பா.ம.க-வின் சாதியப் போக்குக் குறித்து எனக்குக் கடுமையான கருத்துக்கள் இருந்தாலும், அவர்களுடைய தமிழ் உணர்வு குறித்தோ தமிழினப் பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடு குறித்தோ இதுவரை எனக்கு எந்த ஐயமும் இருந்ததில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழர் பிரச்சினைகள் எது குறித்தும் அவர்கள் கண்டு கொள்ளாதிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது!
ஆக, இவர்கள் மீதுள்ள சாதி தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் இவர்களுக்கு வாக்களிப்பது எந்த விதத்திலும் நல்ல முடிவாகத் தெரியவில்லை.
இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே!
இவர்களுக்கா உங்கள் வாக்கு?
இவரா உங்கள் அடுத்த முதல்வர்?
- இ.பு.ஞானப்பிரகாசன்
தலித்துக்களுக்க ு ஆதரவாக பேசினால் முற்போக்கு என்று பலர் கருதுவதால் நீங்களோ அல்லது பிறரோ இப்படி எழுதுவது ஒன்றும் புதிதல்ல...!
உங்கள் அடி மனதை தொட்டு சொல்லுங்கள் உங்களிடம் சாதி உணர்வு இல்லையென்று....!!
ஏதோ பொதுத் தளத்தில் பேசும் போது ஏதோ ஏசு நாதர்? போல பேசுவதும் தனிப்பட்ட முறையில் பிற்போக்காகவே பலர் இருக்கிறார்கள்.
தலித் காதலுக்காக மட்டுமே பேசும் "பல முற்போக்கு முத்திரையாளர்கள ்" பலரும் அதே போல பிற சாதியினர் பாதிக்கப்பட்டால ் அது பற்றி எதுவுமே கண்டு கொள்வதில்லை. என்பது உண்மை.
தலித்துக்களுக்க ு ஏற்படும் பிறச்சனை போல வேறு யாருக்கும் ஏற்பட்டதே இல்லையா?. அது போன்ற ஒரு பிரச்சனையை வேறு யாராவது பேசுகிறார்களா? பேசி இருக்கிறார்களா?
இன்றைய முற்போக்கு கூட சாதி அடிப்படையில் இயங்குகிறது.
( இந்த செய்தி அன்புமணிக்கு ஆதரவு தெரிவிக்க அல்ல!! வெறி கொண்டு போய் இராசபகேச்வுடன் ஒப்பிடுவதை கண்டித்து..)
//தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்களுள் ஒன்று காதல்//
அலையுங்கள்.. நல்ல அலைங்க.. ஊர் ஊரா.....அலைங்க
உலகமய பிரச்சனையோ.. பிற பொருளாதார பிரச்சனையோ முக்கியமில்ல பொம்பள பின்னாடி அலைங்க...
எல்லா பிரச்சனையும் தீர்ந்து போகும்.
நாட்டில் சாதிக்கு எதிராகப் பேசிய, பேசுகிற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கப் போயும் போயும் திருமாவளவனை நீர் எடுத்துக்காட்டி சாதி எதிர்ப்புப் பேசும் எல்லோருமே அவரைப் போன்றவர்கள்தாம் என நிறுவப் பார்ப்பது பேதைமை! அவர் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் ஆனால் எல்லாரும் அப்படி இல்லை; குறிப்பாக, நான் அப்படிப்பட்டவன் இல்லை. அடிமனதென்ன அடியாழ் மனதைத் தொட்டே சொல்லுவேன் என்னிடம் சாதி உணர்வு துளியும் கிடையாது. ஆனால், என்றைக்குமே என்னிடம் சாதி உணர்வு இருந்ததில்லை எனச் சொன்னால் அது பொய்! காலங்காலமாக இங்கே தமிழ்க் குடும்பங்களில் சாதி உணர்வு ஏதோ ஒரு வகையில் அடுத்தடுத்த தலைமுறையிடம் அறிமுகப்படுத்தத ்தான் படுகிறது. என் பாட்டி, தாத்தா எல்லோரும் மேல்சாதித் திமிர் உள்ளவர்கள்தாம். என் தாத்தாவைப் பார்த்தே வளர்ந்த எனக்கும் சிறு வயதில் அஃது ஏற்பட்டது. ஆனால், அதே தாத்தா அறிமுகப்படுத்தி ய திராவிட இயக்கக் கொள்கைகளும் வரலாறும் தமிழின் மேன்மையும் உணரத் தொடங்கிய பிறகு சாதி எந்தளவுக்கு அருவெறுப்பானது என்பது புரியத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நான் அதை முற்றிலும் விட்டொழித்து விட்டேன். அதுவும் விடலைப் பருவத்திலேயே.
//தலித்துக்களுக்கு ஏற்படும் பிரச்சனை போல வேறு யாருக்கும் ஏற்பட்டதே இல்லையா? அது போன்ற ஒரு பிரச்சினையை வேறு யாராவது பேசுகிறார்களா? பேசி இருக்கிறார்களா? // - ஏன் இட ஒதுக்கீடு என்பது வன்னியர்கள், தலித்துகள் என எல்லோருக்குமான பிரச்சினைதானே? அதற்கு எல்லோரும் குரல் கொடுக்கவில்லையா ? சாதிவெறியின் உச்சக்கட்டமான கௌரவக் கொலை எந்த சாதி மீது நிகழ்த்தப்பட்டா லும் அதற்கு எதிராகத் தலைவர்கள், ஊடகர்கள், எழுத்தாளர்கள் என எல்லோருமே பேசத்தானே செய்கிறார்கள்? பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டது எனப் பொருளா என்ன?
//வெறி கொண்டு போய் இராசபகேச்வுடன் ஒப்பிடுவதை கண்டித்து// - எது வெறி? யாருக்கு வெறி? சக மனிதனை வெட்டிக் கொல்லுவது பற்றிக் கேள்வி கேட்டால் அது முக்கியமான விதயம் இல்லை என மறைமுகமாகக் கொடூர நகைச்சுவை புரிவது வெறி இல்லை; அதைக் கண்டிப்பது வெறியா? வெளிப்படையாகவே தான் வெறியன்தான் என ஒப்புக் கொள்கிற அவருக்கு வெறி இல்லை; அதைச் சுட்டிக் காட்டுகிற எனக்கு வெறியா? மிகுந்த அறிவுக்கூர்மைதா ன் உமக்கு!
மற்றபடி, காதல் என்பது 'பொம்பள பின்னால் சுற்றுவது' என அருமையான விளக்கத்தை அளித்தீர்! இதிலிருந்து காதல் என்றால் என்ன என்பதே உம்மைப் போன்றவர்களுக்கு த் தெரியவில்லை என்பது புரிகிறது. அதனால்தான் காதலை எதிர்க்கிறீர்கள ், காதலிப்பவர்களை வெட்டுகிறீர்கள் , வெட்டுபவர்களை ஆதரிக்கிறீர்கள் ! உயிரினங்களின் அடிப்படை உணர்வான காதலைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நீங்களெல்லாம் உலகமயம், பொருளியல் போன்ற பெரிய விதயங்களைப் பற்றி ஏதோ புரிந்துவிட்டாற ் போல் கவலைப்படுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது! தமிழர் பண்பாடான காதலை எதிர்ப்பவர்கள் கனிவு கூர்ந்து தமிழர் எனச் சொல்லிக் கொள்ளாமல் இருங்கள்! அது தமிழ்த்தாயை இழிவுபடுத்துவதா கும்.
உங்கள் எழுத்தில் உள்ள சொற்களை மீண்டும் படியுங்கள்.எவ்வ கையில் எழுத்து இழையோடி இருக்கிறது பாருங்கள்.
முற்போக்கு முகமூடிகள்.
by Savukku · January 16, 2014
தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஒரு தலித் பெண் இருக்கிறாள். அவள் இரவு நேரத்தில் தனியாகக் செல்கையில், அவளை 10 பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார் கள். அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியதில் 6 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிள்ளைமார். பாதிப்புள்ளாகிய பெண், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
V_mask_by_Sylent_Phantom
இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நடந்ததாக வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும் தெரியுமா ?
முகநூலே கொந்தளித்திருக் கும். ஆதிக்க சாதியின் அராஜகம். தலித்துக்கெதிரா ன ஒடுக்குமுறை என்று ஒரு பக்கம். மற்றொரு பக்கம் பெண் என்றால், அதுவும் தலித் பெண் என்றால் இளக்காரமா.. என்று மற்றொரு பக்கமும் வாரக்கணக்கில் நிலைச் செய்திகள் ஆவேசமாக வெளி வந்தபடி இருந்திருக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டிருக்கும். முஸ்லீம் அமைப்புகள் வீதியில் இறங்கியிருக்கும ். மனித உரிமைப் போராளிகள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர், மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதியிருப்பார் கள். உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களில், தலித்தியம், பைத்தியம், வைத்தியம், வெங்காயம் போன்ற தலைப்புகளில், படித்தாலே தலை வலி வருகிறார்ப்போல கட்டுரைகள் எழுதுவார்கள். அதைப் படித்து விட்டு, ஆகா ஓகோவென்று சிலாகித்து, முகநூலில் வர்ணிப்பார்கள் முற்போக்காளர்கள ். இது தவறு என்று சொல்ல இயலாது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து முற்போக்காளர்கள ் நிற்பதே நியாயமான விஷயம்.
ஆனால், இது எதுவுமே காரைக்கால் விஷயத்தில் நடக்கவில்லை. காரைக்கால் சம்பவம் என்ன ?
“பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.
தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனர். பின்னர், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள ் என காரைக்காலைச் சேர்ந்த முகம்மது இர்பான், அப்துல்காசிம், முகம்மது அமீர் அலி, அக்பர் அலி, முகம்மது யூசுப், முப்பாயைத், அப்துல்நாசர், திருநள்ளாறைச் சேர்ந்த மதன், எழிலரசன், பாபுராஜன் ஆகிய 10 பேர்களைக் கைது செய்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மீதமுள்ள 5 பேர்களில் இளம் குற்றவாளியை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேடப்பட்ட 4 பேரில் பைசல் என்பவர் வெள்ளிக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயகாந்தன் என்பவரை வேளாங்கண்ணியில் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜெயகாந்தன் அளித்த தகவலின்பேரில் செல்லப்பா என்பவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுவிட ்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரை குற்றப்புலனாய்வ ுத் துறையினர் தேடி வருகிறார்கள்.
சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையை செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பலுடனும் தொடர்புள்ளதாம். வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்தான் முதலில் இளம்பெண்ணை மிரட்டி மணியின் அறையில் வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஜெயகாந்தன் மீது ஒரு பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கைது செய்து சிறையிலடைக்கப்ப ட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில ் 18 மாத சிறை தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் வல்லுறவு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்”.
இதுதான் காரைக்கால் சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சரிபாதி தலித்துகள். சரிபாதி இஸ்லாமியர்கள். ஆனால், இந்த சம்பவம் குறித்து பெருமளவில் கண்டனங்களோ, எழவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர், காரைக்கால் எம்.எல்.ஏ நஜீமின் உறவினர்கள். இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்க ு பேட்டியளித்த நஜீம், பாதிக்கப்பட்ட பெண், விலை மாது, அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கொஞ்சமும் மனசாட்சி இன்றி பேட்டியளித்தார் . இந்தப் பேட்டி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக ்க வேண்டும். ஆனால், ஒரு சாதாரண சலனத்தைத் தாண்டி, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறியது.
13298_103380996372042_2005344_n
நஜீம் எம்.எல்.ஏ
திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இப்படிப் பேசியதற்காக, அவரை கட்சி கண்டித்திருக்க வேண்டும். அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக ்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
முற்போக்காளர்கள ் என்று அழைத்துக் கொள்வோரின் கனத்த மவுனம், மிகவும் அதிர்ச்சியை வரவழைத்தது. எம்.எல்.ஏவை கண்டிக்காதது மட்டுமல்ல, அதில் சம்பந்தப்பட்டவர ்கள் தலித் என்பதை கூட வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஒரு பெண்… அவள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும்…. இப்படிப்பட்ட மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கை யில், அதில் ஈடுபட்டவர்களை அப்பட்டமாக துகிலுரிந்து அம்பலப்படுத்திய ிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின் செல்வாக்கு எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 24ம் தேதி இரவு நடந்த நிகழ்வுக்கு 26ம் தேதி விடியற்காலை வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை . பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதும் , சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், காவல்நிலையத்தில ், அந்தப் பெண் மோசமானவள் என்றும், பாலியல் தொழிலாளி என்றும்
தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக் கும் அநீதி நடக்கையில் பொங்கியெழ வேண்டியது, நடுநிலையாளர்கள் மற்றும் மனசாட்சி உள்ளவர்களின் கடமை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே தலித்துகளும், இஸ்லாமியர்களும் , அயோக்கியத்தனங்க ளில் ஈடுபடுகையில், எவ்வித தயக்கமும் இன்றி அவர்களை விமர்சிக்கவும், கண்டிக்கவும் வேண்டும் என்பதுதான் ஒரு நடுநிலையாளருக்க ான அடையாளம்.
அநீதிகளை அரங்கேற்றுபவர்க ளுக்கு சாதியோ, மதமோ கிடையாது. இந்தியாவே கண்டிராத ஊழலைப் புரிந்த ஆ.ராசா தன்னை ஒரு தலித் என்பதால் கட்டம் கட்டுகிறார்கள் என்றார். ஏழை தலித்துகளின் நிலங்களை அபரித்த அயோக்கிய நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றச்சாட்டுகள ் எழுந்தபோது தான் ஒரு தலித் என்பதால் விமர்சிக்கிறார் கள் என்றார். இது போல, சிறுபான்மை மற்றும் தலித் போர்வையை அயோக்கியர்கள் பயன்படுத்துகையி ல், அவர்களை கண்டிக்காத சமூகம் என்ன சமூகம் ? நீங்களெல்லாம் என்ன நடுநிலையாளர்கள் ?
தலித்துகள் ஒரு புறம் ஒடுக்கப்படுவது எவ்வளவு உண்மையோ, இஸ்லாமியர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது எத்தனை யதார்த்தமோ, அத்தனை உண்மை, வலுவுள்ள தலித்துகள் ஆதிக்கம் செலுத்தி அயோக்கியத்தனங்க ளில் ஈடுபடுகிறார்கள் என்பதும். இஸ்லாமியர்களுக் கும் இது பொருந்தும். அரசு துறையில், தலித்துகளாக இருக்கும் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் செல்வாக்கைக் கேட்டால் பிரமித்து விடுவீர்கள். இதே போல, ஒரு நபர் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு, அது நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்ட ால் கூட, கண்ணை மூடிக் கொண்டு அது பொய் வழக்கு என்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் கூறுவதுண்டு. இதே போல, சாத்வி பிரக்யா சிங் மற்றும் கர்னல் புரோகித் ஆகியோர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து சனாதனவாதிகளின் குரலும் உரத்து ஒலிக்கிறது.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும், ஒட்டு மொத்த சமூகத்துக்கு விரோதியே… அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தருமபுரி இளவரசன் திவ்யா காதல் விவகாரமும், அதையொட்டி நடந்த கலவரம் குறித்தும், வெகு விரிவாக எழுதி களப்பணி ஆற்றிய, பத்திரிக்கையாளர ், செயற்பாட்டாளர், உண்மை அறியும் குழு நிபுணர், பெண்ணியவாதி, மற்றும் கவிஞர் இந்தியா டுடேவில் பணியாற்றும் கவின்மலர். இவர், இந்த சம்பவம் குறித்து, இந்தியா டுடேவில் தென் இந்திய நிர்பயா என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறா ர். அந்தக் கட்டுரையில் “இதற்கிடையே சமூக ஊடகங்களில் காரைக்கால் சம்பவம் தொடர்பாக மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட ்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்க ள் அனைவரும் தலித்துகளும், இஸ்லாமியர்களும் தான் என்று திரும்ப திரும்ப பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, “இதில் மற்ற பிற்படுத்தப்பட் ட சாதியினரும் இருக்கிறார்கள்” என்கிறார் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர்.”
1467186_10202786954258224_1920763638_n
சிறந்த பத்திரிக்கையாளர ் விருது பெறும் கவின்மலர்
இப்படி கவனமாக சம்பவத்தில் ஈடுபட்ட தலித்துகளை பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார் கவின்மலர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலித்துகள், இத்தனை மோசமான சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்த செய்யும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார். சரி. இந்தியா டுடேவில் சாதிப் பெயர்களை குறிப்பிடுவதற்க ு தடையேதும் உள்ளதா என்று பார்த்தால், இந்தியா டுடேவில் 2013ல் வெளியான காதல் திருமணங்கள் குறித்த கட்டுரையில் முழுக்க முழுக்க சாதிப்பெயர்களைப ் பயன்படுத்தியுள் ளார். இணைப்பு.
மற்ற சாதியினர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகையில், அவர்கள் சாதியை வெளிப்படையாக குறிப்பிடும் முற்போக்காளர்கள ், தலித்துகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடத் தவறுவது அவர்கள் நடுநிலை என்ற போர்வையில் அயோக்கியத்தனங்க ளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார ்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
IMG_0463_-_Copy
கவிதாவோடு பேச்சுவார்த்தை நடத்தும் வன்னி அரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது பாலியல் புகார் அளித்த கவிதா என்ற பெண்ணோடு, அக்கட்சியின் நிர்வாகி வன்னி அரசு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அங்கே உள்ள ஒரு பத்திரிக்கையாளர ோடு பேசி, அதற்கு ஏற்பாடு செய்தது கவின்மலர். அது மட்டுமல்லாமல், திருமாவளவன்-கவி தா விவகாரம் குறித்து, நெற்றிக் கண் இதழ் தொடர்ந்து எழுதி வந்தபோது, அந்த செய்தியாளரை தொடர்பு கொண்டு, திருமாவளவனைப் பற்றி இப்படி எழுதாதீர்கள்… அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர் என்று பேசியுள்ளார் கவின்மலர். திருமாவளவன், கவிதா விவகாரம் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், காவல்துறையிடம் புகார் என்று வந்த பிறகு, அது குறித்து எழுதுவது ஊடகங்களின் கடமை. அதைச் செய்யாதே என்று தடுக்கும் கவின்மலர் போன்றோர்தான், இன்று நடுநிலையாளர் என்ற பெயரில் முற்போக்கு முகமூடிகளை அணிந்து வலம் வருகிறார்கள்.
சாதி வெறியோடு அலையும் ஆதிக்க சாதியினர் சமுதாயத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்களோ, அதே போன்ற ஆபத்தானவர்கள்தா ன் முற்போக்கு முகமூடிகளை அணிந்து தலித்துகளின் தவறுகளை மூடி மறைத்து அவர்களை காப்பாற்ற முயலும் போலி நடுநிலையாளர்கள் .
ஆனால், இதை நீங்கள் ஏன் இங்கு வந்து பதிந்திருக்கிறீ ர்கள் என எனக்குப் புரியவில்லை. இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று - தாழ்த்தப்பட்ட சாதியினரும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் ; ஆனால், ஆதிக்க சாதியினரின் குற்றங்களை வெளிப்படையாக்கு வது போலத் தாழ்த்தப்பட்டவர ்களின் குற்றங்களை ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவதில்லை என்பதை எனக்கு உணர்த்துவதற்காக.
அதுதான் உங்கள் நோக்கம் எனில், அதற்காகவும் தெரியாத இத்தனை தகவல்களைக் கொண்ட இந்தக் கட்டுரைக்காகவும ் என் நன்றி! ஆனால் அதே நேரம், நான் எழுதியுள்ள மேற்படி கட்டுரையில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் ; ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தா ம் கீழ்த்தரமானவர்க ள் என்று நான் எங்கும் எழுதவில்லை. ஏன் எழுதவில்லை என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான். எல்லா சாதியிலும் கேடு கெட்டவர்களும் இருக்கிறார்கள், மிகச் சிறந்த மனிதர்களும் இருக்கிறார்கள், அப்படித்தான் இருக்க முடியும் என்கிற இந்த இயற்கை அமைப்பை நான் நம்புவதே! மேற்படி, கட்டுரையில் நான் எழுதியிருப்பதெல ்லாம், "பா.ம.க சாதிக் கட்சி, சாதிவெறியை அவர்கள் வெளிப்படையாகவே சமூகத்தில் தூண்டி விடுகிறார்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நல்லபடி வாழ முடியாது எனப் படுவெளிப்படையாக அவர்கள் மிரட்டுகிறார்கள ். எனவே, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை அப்படி அபாயத்தில் ஆழ்த்தும்படியாக நாம் வாக்களிப்பது தவறு" என்பதுதான். மற்றபடி, தாழ்த்தப்பட்டவர ்கள் எல்லாரும் ஏதுமறியாத பச்சைப் பிள்ளைகள். அவர்களுக்கு வாயில் விரல் வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாது. அன்புமணியும் அவர் அப்பாவும் பா.ம.க-வினரும்த ாம் கேடு கெட்டவர்கள் என்று நான் கூறவில்லை. என்னைப் பொறுத்த வரை பா.ம.க, வி.சி.க இரண்டுமே சாதிக் கட்சிகள்தாம்.
இரண்டாவது காரணம், நானும் அப்படிப்பட்ட 'முற்போக்கு முகமூடி' மாட்டியவன் எனக் குற்றஞ்சாட்டுவத ு. அஃது உங்கள் நோக்கமாக இருந்தால், http என்கிற முகவரியில் உள்ள பதிவுக்கு வந்து பார்க்கலாம். அதில் "பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை எவ்வளவுதான் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாலும் அவை தமிழர்களுக்கு எதிரான கொள்கையான சாதியத்தைக் கடைப்பிடிப்பவை. .." என்று எழுதியிருக்கிறே ன். இதே போல, ஈழப் பிரச்சினையை எடுத்துக் கொண்டீர்களானால் , எல்லாரும் நடந்த இனப்படுகொலைக்கு உதவியவர் என்று கருணாநிதியை மட்டும்தான் திட்டியிருக்கிற ார்கள், திட்டுகிறார்கள் . ஆனால், கருணாநிதியோடு சேர்ந்து அதே காங்கிரசு ஆட்சிக்கு ஆதரவு வழங்கிய வகையில் திருமாவளவனும் எவ்வகையிலும் கருணாநிதிக்கு குறைந்தவர் இல்லை. அவர் செய்ததும் மன்னிக்க முடியாத தமிழின துரோகம்தான் என்று இணையத்தில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியவன் நான் மட்டும்தான். பார்க்க: http.
நீங்கள் மிக சிறந்த கட்டுரையை இயற்றியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இ ந்த கட்டுரை சாதி வெறியர்களுக்கு தவறாகத்தான் தெரியும்.மேலும் பல கட்டுரைகள் வெளியிட என் வாழ்த்துக்கள் தோழர்...
RSS feed for comments to this post