கடந்த மாதம் திருப்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் என்றும், அது தமிழர்களை அன்னியர்கள் ஆண்டார்கள் என்பதற்கான அவமானச் சின்னம் என்றும் பேசியிருக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் வீரபாண்டியக் கட்டபொம்மனையும் தரக்குறைவாக விமர்சித்து இருக்கின்றார். இது தொடர்பாக தேனி மாவட்ட நாயக்கர் முன்னணி என்ற சாதிவெறி அமைப்பைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற நபருக்கும், சீமான் அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் வெளியாகி இருக்கின்றது. சீமானின் அரசியல் நாகரிகத்தைப் பற்றியும், அவரின் யோக்கியதையைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் அதைக் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
சீமானை இப்படி எல்லாம் பேசச் சொல்லி பின்னிருந்து இயக்கும் இயங்கு சக்தி என்ன என்று பார்த்தால், அவரின் கீழ்த்தரமான அரசியல் பிழைப்புவாதமே. அவர் பெரியாரியம் பேசுவார்; திராவிடத்தை எதிர்ப்பார், ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்பார்; ஆனால் கன்னடர்களையும், மலையாளிகளையும், தெலுங்கர்களையும் தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்பார். அப்படியே வைகுண்டராஜனிடம் காலை நக்கி 'ஆசியும்' வாங்கிக் கொள்வார். வாங்கிக் கொண்ட கையோடு தமிழ் முதலாளியம் பேசுவார். யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், அவர்களை 'ங்கோத்தா ங்கொம்மா' என்று வசை பாடுவார். முடிந்தால் ஆள் வைத்தும் அடிப்பார். இதுதான் சீமானுக்குத் தெரிந்த அரசியல்.
இங்கே இருக்கும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் சீமானை அப்படி என்ன செய்து விட்டார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை. அவர் நேர்மையான வழியில் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு தெருவிலே விட்டுவிட்டார்களா? இல்லை சீமான் பிடித்து வைத்திருந்த தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்களா? எதற்காக சீமான் முஷ்டியை முறுக்குகின்றார்? இந்த அதிகாரத்தை சீமானுக்கு யார் கொடுத்தது? தொண்டை கிழிய முக்கி முக்கிப் பேசினால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா?
இங்கே தேர்தல் அரசியல் செய்யும் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை தேவைப்படுகிறதோ இல்லையோ ஒரு எதிரி நிச்சயம் தேவைப்படுகின்றான். அந்த எதிரியை முன்வைத்தே தங்களை கதாநாயகர்களாக அவர்கள் காட்டிக் கொள்கின்றார்கள். பாஜகவினர் எப்படி பாகிஸ்தானையும், முஸ்லீம்களையும் எதிரியாக கட்டமைத்தார்களோ, 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்த சிவசேனா எப்படி மராட்டிமொழி பேசாத அனைவரையும் எதிரிகளாக கட்டமைத்தார்களோ, அதே போல அண்ணன் சீமான் அவர்கள் 'தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்து, அதற்காக கன்னடர்களையும், தெலுங்கர்களையும், மலையாளிகளையும் எதிரிகளாக கட்டமைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களையும், மலையாளம் பேசும் மக்களையும், கன்னடம் பேசும் மக்களையும் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஓர் ஓட்டு கிடைக்கும் என்று சீமான் கணக்கு போடுகின்றார்.
தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று சீமான் நினைப்பது ஒன்றும் தவறான கருத்தல்ல. ஆனால் எந்தத் தமிழன் என்று சீமான் தெளிவாகக் கூற வேண்டும். சீமானுக்குப் புரவலர்களாக இருக்கின்றார்களே ஆற்று மணலையும், கிரானைட்டையும், தாதுமணலையும் கொள்ளையடித்த அந்த நல்ல தமிழ் முதலாளிகளா? இல்லை இருக்க இடமில்லாமல், உடுக்க நல்ல ஆடையில்லாமால் தங்கள் கை, கால்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தினம்தினம் அற்ப கூலிக்கு உழைத்துச் சாகும் அந்த சாமானிய தமிழ் மக்களா? சீமான் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
சீமான் 'தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்' என்று சொல்கின்றார். நடிகர் சங்கத் தேர்தலில் கூட தமிழர்கள் தான் நிற்க வேண்டும்; விஷால் ரெட்டி நிற்கக் கூடாது என்கின்றார். அப்படி என்றால் தமிழ்ப் படங்களில் தமிழர்கள் மட்டுமே நடிக்க வேண்டும்; அந்தத் திரைப்படங்களுக்குப் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று சீமானால் சொல்ல முடியுமா? அதை மீறி எவனாவது பார்ப்பன மாதவனையும், மலையாளி பாவனாவையும் வைத்து படம் எடுத்தால், அவனை ஓட ஓட செருப்பாலே அடித்து தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்வதற்கு அண்ணன் சீமான் அவர்கள் தயாரா?
அண்ணன் சீமான் அவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படையாக இருக்கும் பிரச்சினை என்பது காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம் போன்றவையே. ஆனால் சீமான் போன்றவர்கள் கர்நாடகாவிலும், கேரளாவிலும், ஈழத்திலும் இருப்பதே இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும். எப்படி சீமான் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்கின்றாரோ, அதே போல கர்நாடகா கன்னடர்களுக்கே, கேரளா மலையாளிகளுக்கே, இலங்கை சிங்களவர்களுக்கே என்று சொல்லும் இனவாதிகள் அங்கே இருக்கின்றார்கள். எப்படி தமிழ் முதலாளிகள் சீமானை ஆதரிக்கின்றர்களோ, அதே போல அவர்களையும் அவர்களது முதலாளிகள் ஆதரிக்கின்றார்கள்; கொம்புசீவி விடுகின்றார்கள். மற்றபடி மக்கள் நலன் சார்ந்த எந்த அக்கறையும் அவர்களிடம் கிடையாது. மொழி வெறியையும், இன வெறியையும் சாமானிய மக்களிடம் தூண்டிவிட்டு அவர்களது பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை அவர்கள் அறியாமல் செய்வதே இது போன்ற இனவாதிகளின் வேலை.
பின்நவீனத்துவவாதிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கைக்கூலிகள் போன்றவர்களைப் போன்றே இவர்களும் முதலாளியம் பெற்றெடுத்த பிள்ளைகள். இவர்களின் நோக்கமே பாட்டாளி வர்க்க உணர்வை சிதறடிப்பதுதான். அதற்காக என்ன வகையான வழிமுறைகளையும் இவர்கள் கையாளுவர்கள்.
'முப்பாட்டன் முருகன்; எம்பாட்டான் சிவன்' என்று சீமான் சொல்கின்றார். அப்படி என்றால் ஒரு பார்ப்பனனுக்குப் பிறந்தவன் தான் முருகன் என்றாகின்றது. அப்படி என்றால் சீமானின் முப்பாட்டனும், பாட்டனும் பார்ப்பனர்கள். அவர்களை தனக்கான முன்னோடியாகக் கொள்ளும் சீமானும் ஒரு பார்ப்பன அடிமை. அதனால் தான் திராவிடத்தை எதிர்க்கின்றார். திருமுருகாற்றுப்படை என்ற நூலில்தான் முதன்முதலில் முருகனுக்கு அப்பன் சிவன் என்று வருகின்றது. அதற்கு முந்திய எந்த இலக்கியத்திலும் முருகனுக்கு அப்பன் சிவன் என்று கிடையாது என்பது பார்ப்பன அடிமை சீமானுக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே. முருகன் பாலைநிலத்தின் தெய்வம்; கொற்றவையின் மகன் என்று பேராசிரியர் வானமாமலை அவர்கள் தன்னுடைய முருகன் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறுகின்றார். ஆனால் சீமானோ, சிவனை முருகனின் அப்பனாக மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றார். பார்ப்பனனைப் பகைத்துக் கொண்டால் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது என்பது சீமானுக்குத் தெரியாதா என்ன?
அதனால் தான் திருமலை நாயக்கர் மகாலை மட்டும் இடிக்க வேண்டும் என்று சொல்கின்றார் சீமான். அவருக்குத் தெரியாதா மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவரங்கம் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், காஞ்சி ஏகாம்பரீசுவரர் கோவில் போன்றவையும் சீமானின் பரம எதிரி நாயக்கர்களால் கட்டப்பட்டதுதான் என்பது. சீமானுக்கு உண்மையிலேயே சூடு, சுரணை இருந்தால் அதையும் இடிக்கச் சொல்லட்டும். அப்படி இடிக்கச் சொன்னால் அவரின் அரசியல் நேர்மையை நாம் பாராட்டலாம்.
அன்னியர்கள் ஆண்டதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் திருமலை நாயக்கர் மகால் மட்டும்தான் இருக்கிறதா? ஆங்கிலேயர்கள் ஆண்டதற்கு அடையாளமாக சென்னையில் மட்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, கன்னிமெரா நூலகம் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் பார்த்தால் குறைந்தது பத்தாயிரம் 'அவமானச் சின்னங்களாவது' தேறும். சீமான் எல்லாவற்றையும் இடிக்க வேண்டும் என்கிறாரா? என்ன மடத்தனம் இது?!
சீமான் சொல்வது போன்று நாயக்க மன்னர்கள் அயோக்கியர்கள் என்றால், கோவிலில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த ராஜராஜ சோழனை என்னவென்று சொல்வது? ஆனால் சீமானுக்கு ராஜராஜ சோழனை மிகவும் பிடிக்கும். ஏன் என்ற காரணத்தை நடிகை விஜயலட்சுமியிடம் கேட்டால், வண்டி வண்டியாக சொல்வார்.
அரசியலிலும் நேர்மையில்லை; தனிமனித வாழ்க்கையிலும் ஒழுக்கமில்லை இப்படிப்பட்ட சீமான் வீரபாண்டியக் கட்டபொம்மனை அவதூறாகப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? கும்பினி ஆட்சிக்கு எதிராக வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், விருப்பாச்சி கோபால நாயக்கரையும் விடுதலைப் போராட்ட வீரர்களாக மட்டுமே பார்த்த தமிழ் மக்களிடம் சீமானைப் போன்ற தமிழிழிவுவாதிகள் அவர்களை நாயக்கர்களாக, தெலுங்கர்களாக காட்ட முற்படுகின்றனர். எப்படி சாதிக் கழிசடைகள் தீரன் சின்னமலையை கவுண்டராக காட்ட முற்படுகின்றார்களோ, மருது சகோதரர்களை தேவராக காட்ட முற்படுகின்றார்களோ அதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல சீமானின் இந்தச் செயல். ஆனால் தீரன் சின்னமலையும், மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், வீரபாண்டியக் கட்டபொம்மனும் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் என்பதையும் அவர்கள் தங்களுக்குள் ஒருநாளும் மொழிபேதமோ, இனபேதமோ பார்த்ததில்லை என்பதும் ஒன்றாகவே கும்பினி ஆட்சியை எதிர்த்தார்கள் என்பதும், அவர்கள் அனைவரும் அதற்காக தங்களின் உயிரையும் கொடுத்தார்கள் என்பதும் வரலாறு. ஆனால் மதவாதிகளும், சாதியவாதிகளும், இனவாதிகளும் தங்களுடைய அற்ப பதவி சுகத்திற்காக வரலாற்றை தங்களுக்கு ஏற்றார்போல புரட்டி எழுதுகின்றார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் தெலுங்கு பேசும் மக்கள். தமிழ் எப்படி சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் பேசப்படுகின்றதோ, அதே போல தெலுங்கும் நிறைய சாதி மக்களால் பேசப்படுகின்றது. அதுவும் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றது. பெரும்பான்மையான தெலுங்கு பேசும் மக்களுக்கு தெலுங்கை எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதுதான் உண்மை. வீட்டில் பேசப்படும் ஒரு மொழியாக மட்டுமே தெலுங்கு தமிழ்நாட்டில் உள்ளது. அதை நாயக்கரும், நாயுடுவும் மட்டுமே பேசுகின்றார்கள் என்பதில்லை; தலித் மக்கள் பேசுகின்றார்கள், செட்டியார்கள் பேசுகின்றார்கள், ஆசாரிகள் பேசுகின்றார்கள், பார்ப்பனர்களிலே ஒரு பிரிவினர் பேசுகின்றார்கள்; இன்னும் நிறைய சாதிமக்கள் பேசுகின்றார்கள். அப்போது அவர்கள் எல்லாம் சீமானின் கணக்குப்படி பார்த்தால் தமிழர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட வேண்டும்!
இதிலே குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் அவர்களில் பல பேர் தங்களின் தாய்மொழி தமிழ் என்றே சான்றிதழ்களில் குறிப்பிடுகின்றார்கள். அவர்களை யாரும் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியே வந்தேறிகளாக தமிழ் மக்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது. ஆனால் சீமான் போன்ற இனவெறி தலைக்கேறிய சில பதவி வெறியர்களுக்கு மட்டுமே அவர்கள் தெலுங்கர்களாகத் தெரிகின்றார்கள். உழைக்கும் சாமானிய மக்கள் ஒருவனை எப்போதும் தெலுங்கனாகவோ, கன்னடனாகவோ, இல்லை மலையாளியாகவோ பார்ப்பதில்லை. சீமானைப் போன்ற கொழுத்துப்போன அரசியல் கழிசடைகள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கையின் இடத்தில் இனவெறியை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லரை தங்களுக்கான சித்தாந்தத் தலைவராக ஏற்பதில் இருந்தே அவர்கள் தங்களை இனவெறியர்கள் என்று வெளிப்படையாக சொல்கின்றார்கள்.
தமிழ்த் தேசியம் பேசும் சீமான் அவர்கள் எப்போதுமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்பது வரலாறு. தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் தொடங்கி இப்போது நடைபெற்ற சேச சமுத்திரம் கலவரம்வரை அவர் யார் பக்கம் இருந்தார் என்பது வெளிப்படை. தேவர் ஜெயந்திக்கு ஆண்டு தவறாமல் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யும் சீமான் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுப்பார். சீமானின் உடம்பில் ஓடுவது மேட்டுக்குடி சாதிவெறியும், மொழிவெறியும், பதவிவெறியும் பிடித்த ரத்தமே ஒழிய, அது சாமானிய தமிழ் மக்களின் ரத்தமல்ல! எந்த அரசியல் அறிவும் இல்லாத சாமானிய தமிழ் இளைஞர்களுக்கு இனவெறியும், மொழிவெறியும் ஊட்டி அவர்களை மொழிச் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் சீமான் அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய பேர்வழி ஆவார்.
- செ.கார்கி
இந்தபாளையப்பட்டு முறை என்றால் என்ன? கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு. வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு . மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு. இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.
பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான ் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!
ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்ப ட்டது. அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.
கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச் சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின ்றனர். எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால ் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச் சி என்ற பெயரே கிடையாது. கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.
அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?
மாமன்னானைத் தேடிப்பார்த்தால ் எட்டயபுர பாளையக்காரனுக்க ு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த 'காட்ர கட்டபிரமையா' எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்! இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன். சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?
தொடரும்!
அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்க ு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை 'புளிச்' எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக் கொள்வது, மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!
கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு. தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள். கெட்டிப்பொம்முவ ின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தா ன். எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக் காரனாக அரும்பணியாற்றும ் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமைய ா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தின் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.
காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட ்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.
1.காட்ர கட்டப்பிரமையா
2.கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன்(1709-1736).
3.பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன்(1 736-1706).
4.இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).
5.வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799). இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பிஆர் பந்துலுநாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த 'வானம் பொழிகிறது பூமி விழைகிறது' சிவாசிக்கனேச கட்டப்பொம்மன்!
அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியனை ஏறினான்?
-தொடரும்!
இவ்வளவு அழகா இவ்வளவு கோர்வையா தமிழின உணர்வை சாதிவெறிபோல எழுதி குழப்பி வழக்கமான திராவிட புலம்பலான "தமிழ்தேசியம் பேசினாலே பார்பனர்கள் வந்துவிடுவார்கள ் "ங்கற கதைல வந்து முடிச்சிருக்குறீங்க...
செ.கார்கி நீங்களே சொல்றீங்க அவங்க (தமிழரல்லாதோர்) வீட்டுல தாய்மொழி பேசுறாங்க எழுதுறதில்ல ஆனா சான்றிதழ்கள்ல தமிழ்தான் தாய்மொழினு குடுக்குறாங்கனு .நான் கேக்குறேன் ஏன் இந்த ஈனப் பொழப்பு?
தன் அடையாளத்த விட்டுக்கொடுத்த ு பல நலன்களுக்காக சான்றிதழ்கள்ல ஏன் தமிழ்தான் தாய்மொழினு கொடுக்கனும்?
ஏன்யா... ஆங்கிலேயன் அதகட்டுனான் இத கட்டுனான் அதெல்லாம் இடிப்பீங்களானு கேக்குறீங்களே!!
நான் கேட்குறேன்...
அதெல்லாம் கட்டுன ஆங்கிலேயன் அவன் நாட்டுக்கு போயிட்டானே ஆனா நீங்க (தமிழரல்லாத நாயக்கர் இன்ன பிற) இங்க சகட போட்டு உக்காந்து ஆட்டயப்போட்டுட் டு இருக்கீங்களேயா! !
வேணும்னா ஒன்னு பண்ணுங்க இப்படி பேசுற தெலுங்கர்கள் தமிழர் மண்ண விட்டு வெளியேருங்க நாயக்கர் மகால் அப்படியே இருக்கட்டும் எங்களுக்கு பிரச்சன இல்ல. இல்லாட்டி நீங்க இங்க இருக்கலாம்னா நாயக்கர் மகால தூக்கிருவோம்... எப்புடி வசதி?
அதென்ன ஆசாரி செட்டியார் இன்னபிறர்லாம் தெலுங்கு பேசுறாங்க அவங்கெல்லாம் தமிழரில்லையானு கேக்குறீங்க?!!!!
உண்மையிலேயே உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
தமிழைத் தாய்மொழியா கொண்ட செட்டியார் ஆசாரி தவிர்த்து தெலுங்கை தாய்மொழியா கொண்டவன் தெலுங்கன்தானய்ய ா... இதுலென்ன சந்தேகம்?
எப்புடி...? மருதிருவர் மத்தவங்களெல்லாம ் கெட்டிபொம்மலுகி ட்ட மொழிபேதம் பாக்கலியா?
அதான அவங்க செஞ்ச தப்பே அதையே நாங்களும் செய்யனும்னு நெனச்சா எப்புடி?
கடைசியா என்னமோ பெனாத்திருக்கீரே..
அரசியலறிவு இல்லாத தமிழ் இளைஞர்களுக்கு மொழிவெறி இனவெறி சீமான் ஊட்டுறாரோ???
கடைசிவரைக்கும் எங்களுக்கு இனஉணர்வு மொழி உணர்வே வந்துரக்கூடாதுன ு ஒம் பாட்டன் பூட்டன் சொல்லிக்குடுத்த மாதிரியே நீங்களும் நெனச்சா ஒங்க எண்ணத்துக்கு எண்ணெய்ய ஊத்தி சீக்கிரமா கொல்லி வச்சிர்றோம்...
உலகத்துலயே அதிமேதாவினு ஒமக்கு நெனப்போ...?
ஒம்ம எழுத்துல வடுக வாசந்தேன் வண்ட வண்டயா வீசுதே மொதல்ல ஒம்ம சைடுகொண்ட சரியிறத சரிபண்ணும்.தமிழ ்தேசியத்த தருதலை தேசியமா பாக்குற ஒம்மப்போல ஆளுதாம்யா தருதல...
அதர பழசான கேள்விகளயே கேக்குறத விட்டுபுட்டு புதுசா ஏதாவது சிந்தியும்...
கட்டுரையை வெளியிட்ட கீற்றுக்கு வாழ்த்துக்கள்!!
நீ சீமானைப்பற்றி இனி எழுதினால் கீற்றை கிழிப்போம்.
நீ சீமானைப்பற்றி இனி எழுதினால் கீற்றை கிழிப்போம்.
அண்ணன் சீமானை விமர்சிக்க நீங்க முன்வைக்கும் காரணங்களை படிக்கும்போது சரியானது போல மாயையை ஏற்படுத்தினாலும ் அது விதண்டாவாதமா இருப்பது கடைசிலதான் புரியுது. உங்கமெலயும் ஏதோ ஒரு சந்தேகத்த உருவாக்குது.
உங்கள் பயம் நியாயமானதுதான் ஆனால் தமிழ் மக்கள் என்றும் தெலுங்கர்களுக்க ு எதிரி அல்ல...யாரையும் விரட்டுவது எங்கள் குணம் அல்ல....நீங்களே விரட்டி விடுவோமே என்று பயப்பட வேண்டாம்...வந்த வரை எல்லாம் வாழ வைப்போம் ஆனால் இனி நம் சொந்தவரை மட்டும் ஆள வைப்போம் ..இது எங்கள் அட்படை அரசியல் உரிமை...இங்கு வாழும் தெலுங்கர்கள் தமிழர்கள் என்று அவர்கள் தெலுங்கை தூக்கி எரிய சம்மதம் என்றால் நன்று இருந்தாலும் தெலுங்கிலிருந்த ு தமிழிற்கு வந்தவருக்கு எங்களை ஆள வைத்து அழகு பார்த்து விட்டோம் இன்று நீங்கள் பழங்குடி தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் குடுக்க வேண்டியது உங்கள் கடமையும் கூட
அந்த மாநாட்டில் அண்ணன் முதலில் இப்படி பேசினார் என்பதற்கு எதாவது ஆதாரம் காட்டுங்க தோழரே.. உங்கள் கட்டுரைகள் முன்பு வாசித்திருக்கிற ேன் என்ற முறையில் இந்த முதல் வரியே நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது .
'இன்னும் உயிரோடு இருக்கிறாயே!' என்று சொன்னால், அதன் நேரடி அர்த்தம் 'செத்துப் போ' என்பதுதான். 'திருமலை நாயக்கர் மகால் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பது அவமானம்' என்று சொன்னால், அதன் நேரடியான அர்த்தம் 'அது இருக்கக்கூடாது' என்பதுதான்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற் கு இரண்டாண்டுகளுக் கு முன்பிருந்து அத்வானி இதேபோல்தான் பேசினார். பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவான கருத்தை இந்துக்களிடம் உருவாக்கினார். சீமான் பேசியதும் அதேபோன்ற பேச்சுதான். அதன் உடனடி விளைவை, முகநூலில் பார்க்க முடிந்தது. சீமானின் தம்பிகள் 'அந்த மகாலை இடிக்க வேண்டும்' என்று எழுதினார்கள். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை இடிப்போம்' என்றார்கள். தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கினார்கள். இன்றுவரை அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து, ராஜராஜசோழன் பற்றி எழுதியதற்கும் பொங்கி இருக்கிறார்கள். அண்ணனுக்கு இருக்கும் படிப்பறிவையும், வரலாற்று அறிவையும் நாம் அறிவோம். அண்ணனுக்குத் தப்பாமல் தம்பிகளும் இருக்கிறார்கள். இராஜராஜ சோழனைப் பற்றி வரலாற்று ஆய்வறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்ரமணியன ் போன்றோர் நிறைய எழுதி இருக்கிறார்கள். கொஞ்சம் முயன்று தேடினால், இணையத்திலேயே அக்கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிப் படிக்கும் பொறுமையும், அவற்றை உள்வாங்கும் அறிவும் சீமானுக்கோ, அவரது தம்பிகளுக்கோ இல்லை. ஒன்றுமட்டும் சொல்லலாம், 'போய் புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்க'
பாட்டாளி வர்க்கம். வர்க்க உணர்வு பெற்று புரட்சி செய்யும் என்பது வரலாறு நிராகரித்த தத்துவம். எங்கும் என்றும் நடை பெற வில்லை.
RSS feed for comments to this post