சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு சார்பாக2014 அக்டோபா் ஐந்தாம் நாள் திருச்சியில் நடைபெற்ற ” சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாடு” குறித்து 2014 அக்டோபா் 16-ஆம் நாள் வினவு இணையதளத்தில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக வெளிவந்த விமா்சனத்திற்கு, சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் விளக்கத்தை முன்வைக்கிறோம் .............................................................................................................................................

திருச்சி மாநாட்டில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாகத் தோழா்கள் கலந்து கொண்டதற்கு முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. வினவு விமா்சனம்  -----

”சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்தக் கூட்டத்தில் இராமதாசு போன்றவா்களை அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியைக் கலைப்பது பற்றியோ, அவா் கேள்விக்குப் பதில் அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப் படவில்லை. ஆதிக்க சாதிவெறியைத் தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவா்களை அம்பலப்படுத்தாமல், பொதுவில் பேசுவதால் என்ன பயன்? திவ்யா-இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக இரண்டு ஊா்களையே கொளுத்தும் இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை எதிர்கொள்ளாமல், சாதி மறுப்புக் காதல் திருமணம் சாத்தியமா என்பதைப் பற்றியெல்லாம் மாநாட்டில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை”.

கூட்டியக்கத்தின் விளக்கம்

திவ்யா-இளவரசன் காதல் திருமணத்தையொட்டி நடந்த சாதிவெறிக் கலவரத்திற்கு எதிராகத்தான் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு எனும் அமைப்பே உருவாகியது. தா்மபுரி வன்முறைக்கு எதிராக, சாதி மறுப்பு சனநாயக சக்திகளின் வலிமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று ஈரோட்டில் இக்கூட்டியக்கம் சார்பாக “சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு”ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை அம்மாநாட்டிற்குத் தடை விதித்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அத்தடையைத் தகா்த்தெறிந்து, அம்மாநாடு ஒருநாள் முழுவதும் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வழக்குமன்ற ஆணை கிடைத்தும் கூட, ஏறத்தாழ 3000-க்கும் மேற்பட்டோர் அம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தனா். இாமதாசு போன்ற சாதிவெறிச் சக்திகளை அம்பலப்படுத்துவதற்காகவே அம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தவிரவும், “குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும், சாதிச்சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” எனத் தீா்மானமும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. போன்ற சாதி அரசியல் கட்சிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்பதில் கூட்டியக்கம் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளது. அதனால்தான், “ஈரோடு மாநாட்டின் மொத்தக்குரலும் ராமதாசுக்கு எதிராக இருந்தது. அதுவே இப்போது சாதியம் பேசும் ஆதிக்கவாதிகளுக்கு எதிராகத் திரும்பியிருப்பது என்னவோ உண்மை” எனக் குமுதம் ரிப்போட்டா் 16.10.2014 இதழ் சரியாகக் குறிப்பிட்டிருந்தது.

திருச்சி மாநாட்டில் பேசிய சிலதோழா்கள் இராமதாசின் பெயரைக் குறிப்பிட்டே கடுமையாக விமா்சித்தனா். ஆனால், பேசிய தோழா்கள் ஒவ்வொருவரும் அதேபோல் இராமதாசின் பெயரைக் குறிப்பிடாவிட்டடாலும், சாதி ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்திப் பேசினா். அனைத்துத் தோழா்களின் பேச்சையும் முழுமையாகக் கவனித்துக் கேட்டிருந்தால், இதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். சாதி ஆதிக்கவாதிகளை எதிர் கொள்ளாமல், காதல் மறுப்புத் திருமணம் சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவா். அந்தப் புரிதல், கூட்டியக்கத்திற்கும் உண்டு.

( 2 ) வினவு விமா்சனம் ----

“பெண் உரிமை பற்றிப் பேசும் மாநாட்டில், விரல் விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன காரணம்?” எனும் வழக்குரைஞா் அங்கயற்கண்ணியின் குமுறலுக்கு என்ன பதில்?எப்படிச் சரி செய்வது என்பதற்கு விடை இல்லை.

கூட்டமைப்பின் விளக்கம்

வினவு சுட்டிக்காட்டும் குறைபாட்டினைச் சுயவிமா்சனத்துடன் ஏற்றுக் கொள்கிறோம். எதிர்வரும் நாள்களில் இதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெளிவு படுத்துகிறோம்.

( 3 ) வினவு விமா்சனம் ------

“அவரவா் தமது ஆதங்கத்தைக் கொட்டிச் செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது. இதில் பார்வையாளா்கள் அதை எடுத்துக் கொள்வது, எப்படிச் சாதி மறுப்பு என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படித் தீா்ப்பது என்பதற்கெல்லாம் விடை இல்லை.”

கூட்டமைப்பின் விளக்கம்

ஒரு கூட்டியக்கத்தின் மாநாட்டில் கருத்துரையாற்றும் தோழா்கள், குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஓரே மாதிரியாகத்தான் பேசுவார்கள் என எதிர்பார்க்கக்க முடியாது. அவரவா் தத்தம் நோக்கில் சிக்கலை அணுகுவதையும் தவிர்க்க இயலாது. ஆனால், சாராம்சத்தில், அடிப்படை நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு நிற்கிறார்களா என்பதுதான் முக்கியம்.  பங்கேற்ற அமைப்புக்கள் ஒரே மேடையில் கூடிச் சாதி மறுப்பிற்கும், சாதி ஆதிக்க எதிர்ப்புக்கும் தங்களது ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சாதி வெறியா்கள் ஒன்றுபட்டு நிற்கும் இன்றைய சூழலில், சாதி எதிர்ப்புச் சனநாயக சக்திகளின் ஐக்கியமும், அதன் வெளிப்பாடும் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் பல்வேறு சாதி எதிர்ப்ப்பு அமைப்புக்களின் இத்தகைய ஒற்றுமை, சாதி வெறியா்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் சாதி மறுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைவழிகள் குறித்துத் தீா்மானங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, “சாதி மறுப்பு என்ற உயா்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள், சிக்கல்களை எப்படித் தீா்ப்பது என்பதற்கெல்லாம் விடை இல்லை”எனும் விமா்சனம் ஏற்புடையது அல்ல!

( 4 ) வினவு விமா்சனம் --------

”இந்தச் சமூக அமைப்பிற்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தக் கூட்டமைப்பினரின் விருப்பமாக உள்ளது. சட்டம், கடுமையாக்கப்பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை என்ற வகையில்தான் மாநாட்டின் பேச்சும், தீா்மானமும் அமைந்துள்ளது.”

கூட்டமைப்பின் விளக்கம்

இந்தச் சமூக அமைப்பிற்குள்ளேயே முழுமையான மாற்றம் ஏற்பட்டு விடும் எனும் பாமரத்தனமான நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவி நிற்கும் நிலவுடைமைச் சிந்தனை பற்றியும், ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யத் துடிதுடிக்கும் தரகா்கள் குறித்தும் எமக்குத் தகுந்த புரிதல் உண்டு. இந்தப் பிற்போக்கு அரசியலமைப்பில் சட்டத்தின் ஆட்சி குறிப்பிட்ட எல்லலைக்குள் மட்டுமே செலாவணியாகும். எனவே, சட்டத்தீா்வே ஒற்றை வழி எனும் மாயையும் இவ்வமைப்பிற்கு இல்லை.

அதே சமயத்தில், சட்ட வழியில் சில உடனடித் தற்காலிகத் தீா்வுகளைப் பெற முடியும். கடந்த காலத்தில் மக்களுக்கு ஆதரவான சில சட்டங்களையும் நாம்பெற்றிருக்கிறோம். ஆனால், அத்தகைய சட்டங்கள் ஏதோ ஆளும்வா்க்கத்தின தயவினால் கிடைத்தவை அல்ல. தொய்வுறா மக்கள் போராட்டத்தால் பறித்தெடுக்கப்பட்ட வெற்றிகள் அவை.

சட்டவழியே ஒற்றைத் தீாவு என்பதும் தவறு. சட்டவழிப் போராட்டங்களே தேவையில்லை என்பதும் தவறு. சட்ட வழிப் போராட்டங்களும் மக்கள்திரள் போராட்டங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எமது முயற்சிகளை“சட்டவாதம்” என நக்கலடித்து இணையதளத்தில் தொடா்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சிலரை நாங்கள் நன்கறிவோம். சிறு துரும்பைக்கூடத் துாக்கியெறியாமல்,வீட்டிற்குள் சுகமாக உட்கார்ந்து கொண்டு, செயல்படுபவா்களைக் கண்டு பொறாமையால் “இணையப்புரட்சி”செய்யும் உதிரிகள் என அவா்களை நாங்கள் அமைதியாகக் கடந்து செல்கிறோம். ஆனால், பெண்கள் விடுதலை முன்னணி அத்தகைய அலைவரிசையில் சிந்திக்கவில்லை எனவும் நாங்கள் அறிவோம். அதனால்தான் எங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக்கத் தோழமையுடன் விளக்கங்களைத் தருகிறோம். அதே தோழமையைத் தோழா்களிடமும் எதிர்பார்க்கிறோம்.

”எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவா்கள். சாதி மறுப்புத் திருமணத்திற்குப் பிறகும், மக்கள் மத்தியில் சாதிமறுப்பாளா்களாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது பிள்ளைகளைச் சாதி மறுப்பாளா்கள் என்றே பள்ளியில் பதிவு செய்து வருகிறோம். சாதி வெறியா்களின் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறோம்” என நீங்கள்குறிப்பிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி.உங்களைப் போலவேதான் இக்கூட்டமைப்பிலுள்ள பல தோழா்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு, பல்வேறு கடுமையான எதிர்பார்ப்புகளுக்கிடையில சாதிமறுப்புத் திருமணங்களைத் தொடா்ந்து நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகத் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

”எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள் மாநாட்டைப் பற்றிய எமது கருத்தைத் தெரிவித்துள்ளோம்” என நீங்கள் குறிப்பிட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி. ஆனால், அடுத்த வரியிலேயே “கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாகவே இம்மாநாட்டைப் பார்க்க முடிந்தது” என ஏகடியம் பேசுவது எத்தகைய தோழமை எனப் புரியாது திகைக்கிறோம். இருப்பினும், “ஒருவா் பொறை (பொறுமை)இருவா் நட்பு” எனும் அனுபவமொழியைக் கருத்தில் கொண்டு எமது விளக்கத்தை அளித்துள்ளோம்.

“கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயினும் நல்லுரையை” 

எனும் பழமொழி நானுாற்றுப்பாடலை இறுதியாக உங்களின் மேலான பார்வைக்குச் சமா்ப்பிக்கிறோம்.

(காகம் கரைவதை விருந்தினா்கள் வருகையின் அறிகுறி என்று கருதி, அதனை அனைவரும் வரவேற்பா். ஆகவே யாராக இருந்தாலும், அவா்கள் செயலில் நல்லனவற்றை இகழாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

தோழமை மிக்க,

சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு

Pin It