சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அராசங்கம் மற்றும் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சு, பிரித்தானிய தமிழர் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் உதவிக்கான மக்கள் அமைப்பு, இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஐக்கிய குழு, அமரிக்கத் தமிழர் அரசியற் செயலவை, உலகத் தமிழ் இயக்கம் ஆகியன ஒன்றிணைந்து கூட்;டாக இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
அறிக்கையின் முக்கிய விடயங்கள் :
மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பான உண்மைகள் மற்றும் சூழமைவுகள் குறித்து விசாரணை செய்து நிரூபிப்பதற்காக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்கப்படுகின்றமையை நாம் வரவேற்கின்றோம்.
2014 மார்ச் 27 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இது தொடர்பாக நிறைவேறிய தீர்மானம் பரந்த , சர்வதேச விசாரணைக்கு வழி வகுக்கும். குறிப்பிட்ட காலவரையறைக்கு முந்திய காலத்தையும் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்தையும் கூட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.
2009ம் ஆண்டில் சில மாதங்களில் இடம்பெற்ற 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலை பற்றிய மறைப்புகள், இழப்பீடுகள், இன்னும் கணக்கெடுக்கப்பாமல் இருக்கும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களின் தலைவிதி, தப்பிப் பிழைத்த மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் நீதியை எதிர்பார்த்திருப்போரின் விளக்கங்கள் ஆகியவை பற்றி எல்லாம் இந்தத் தீர்மானத்தில் அதிக பிரதிபலிப்புகள் அமைந்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்த்திருந்தோம்.
இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்காக அதற்கு ஆதரவாக வாக்களித்த 23 நாடுகளின் முயற்சிகளை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் பாராட்டும் அதேவேளை, சர்வதேச விசாரணை நிறுவப்படுவதற்கு எதிரான இந்திய நிலைப்பாடு குறித்து நாம் கவலையுமடைகின்றோம்.
ஈழத் தமிழர்களோடு தனித்துவமான கலாசாரப் பிணைப்பையும் அறிவு சார் நல்லுறவையும் கொண்டமைந்த சரித்திரத்தையும் தைரியத்தையும் கொண்ட நாடு இந்தியா. அது, இந்தப் பிரேரணையில் வாக்களிக்காமல் விட்டமையும் பிரேரணையில் விசாரணை முறைமையை ஏற்படுத்துவது தொடர்பான செயற்பாட்டுப் பந்திக்கு எதிராக வாக்களித்தமையும் எமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றது. மேலும் தமிழர் பிரதேசம சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருக்கின்றமையையும் வடக்கு - கிழக்கு இராணுவ ஆதிக்கத்திலிருந்து அவசரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் போதியளவில் வெளிப்படுத்துவதில் இந்தப் பிரேரணை குறைவாகவே உள்ளது.
அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னமானது தமிழர் பிரதேசத்தில் தொடரும் நிலப் பறிப்பு, அரச உதவியுடனான குடிப்பரம்பல் மாற்றம், பூர்வீக சொத்துக்கள், பாடசாலைகள், கோயில்கள் போன்றவை அழிக்கப்படல், தமிழ் மக்கள் மீதான கட்டாயகருக்கலைப்பு, தண்டனை விலக்களிப்புடனான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு வழிகோலியிருக்கின்றது. இவை காரணமாகவும் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை பொறிமுறைக்கு அரசு வலுவுடன் போடக்கூடிய தடைகள் காரணமாகவும் சாட்சிகள், தப்பிப்பிழைத்தோர், மனித உரிமைகளுக்காக செயற்படுவோர் போன்றோரின் உடல் ரீதியான பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்குமாறு நாம் ஐ.நா.வைக் கோருகின்றோம்.
ஐ.நா. சாசனத்தின் 99ம் பிரிவின் வழியே இந்த விவகாரத்தை கையாளுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்தைக் கோருகின்றோம். இலங்கைத் தீவில் தமிழ் இனத்துவத்தை சிதைத்து, தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை மேற்கொள்வதை அடிப்படை இலக்காகக் கொண்டு, இலங்கையில் அடுத்தடுத்து வரும் அரசுகள் தொடர்ந்தும் பரவலாகவும் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களே இலங்கைப் பிரச்சினைக்கு மூலவேர் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
சிறிலங்காவின் சட்டவாட்சி என்பது இனவாத மேலாண்மையால் செழுமை பெற்ற சிறிலங்கா அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப் பரவலாக்கலில் தவறிவிட்டதாக இலங்கை உயர் நீதிமன்றத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தம்தான் ஒரே மார்க்கமாக இந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணை ஏற்றுக் கொண்டிருக்கின்றமை குறித்து நாம் வேதனையடைகின்றோம்.
1972 ஆம் ஆண்டு அரசமைப்பு, 1978 ஆம் ஆண்டு அரசமைப்பு, அதன் 13 ஆவது திருத்தம் போன்றவற்றின் உருவாக்கம் எதிலும் தமிழர்கள் பங்குபற்றவேயில்லை. எனவே, தமிழ் மக்கள் தங்களின் பெருவிருப்பினை எந்தத் தடைகளும் இன்றி வெளிப்படுத்தக் கூடிய சனநாயக இடைவெளி ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம்.
அப்படிச் செய்தால் மட்டுமே, சர்வதேச விசாரணை மூலம் பொறுப்புக் கூறக் கூடிய விதத்தில் பயனேதும் கிட்டுமானால், அது நீடிப்பதோடு இந்தத் தீவில் மக்களுக்கான நிலைத்த அரசியல் தீர்வாகவும் மாறமுடியும்.
ஏனென்றால் ஜெனிவா தீர்மான வரைவில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிக் கூறப்படவில்லை என்றதும் தமிழர் தரப்பின் ஒரு பகுதியினரிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பு. இரண்டாவது வழிமுறையைப் பின்பற்றுவதிலேய ே இப்போதும் தமிழர்கள் ஆர்வம் கொண்டிருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தியது. விரும்பியதைச் செய்தால் தூக்கிப் பிடிப்பது, இல்லாவிட்டால் கழுத்தறுத்து விட்டார்கள் என்று தூற்றுவதும் இந்த வழிமுறையின் இயல்பு. அதாவது நாம் சொல்வதையே எதிர்பார்ப்பதைய ே சர்வதேச சமூகம் நிறைவேற்ற வேண்டும் என்ற அதீதமான கற்பனை எண்ணப்பாடுதான் இத்தகைய முடிவுகளை எடுப்பதற்குக் காரணம். இந்தப் பூகோளத்தில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் எந்தளவுக்கு வலிமையானவர்களாக இருக்கிறோம் எமது பொருளாதார வளம் அல்லது பலம் எத்தகையது என்ற சுயமதிப்பீடுகள் எதுவுமின்றி எம்மை நாமே பூதாகாரப்படுத்த ிக் கொள்வதுதான் மிகப்பெரிய தவறு. குறிப்பாக சொல்லப்போனால் இலங்கையில் தமிழ் தேசிய இனம் சர்வதேசத்தை தன்பக்கத்தில் இழுத்து வைத்திருப்பதற்க ுரிய எந்த அடிப்படை பலத்தையும் கொண்டிருக்கவில் லை என்பது வெளிப்படையானது. புலிகளால் உருவாக்கப்பட்டி ருந்த ஆயுத பலம் இன்று இல்லை. சனத்தொகை பலம் கூட இன்று சிதைந்து போய் இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் சிதறிப்போய் கிடக்கிறது. இதனால்தான் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு தனியான தீர்வு ஒன்றை வழங்க முடியாது என்றும் அங்கு 35 வீதமான தமிழர்கள் தான் வசிப்பதாகவும் ஏனைய பகுதிகளிலேயே மீதமான தமிழர்கள் வசிப்பதாகவும் சிங்கள அரசாங்கம் நியாயம் கூறுகிறது. தமிழரின் சனத்தொகை பலமொன்று குவிக்கப்பட்டிர ுந்தால் அது தமிழரின் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தியிர ுக்கும். ஆனால் இன்று அந்தக் கோட்பாடு திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தனியே சிங்களக் குடியேற்றங்களை மட்டும் காரணமாகச் சொல்லிக்கொள்ளும ் தமிழர்கள் தாமும் ஒரு காரணம் என்பதை ஒருபோதும் ஒப்புக் கொள்வதில்லை. வெளிநாடுகளுக்கு ம் வெளி நகரங்களுக்கும் இடம்பெயரும் தமிழரின் தீவிர போக்கு இந்தத் தாயகக் கோட்பாடு சிதைக்கப்பட்டதற ்கு முக்கியமான காரணி என்பதை மறுக்க முடியாது. அதுமட்டுமன்றி இதனால் தமிழரின் அரசியல் பலமும் நாளுக்கு நாள் குறுகி வருகிறது. உதாரணத்துக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந ்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். இப்போது வெறும் ஆறு பேர் தான் தெரிவாக முடிகிறது. இதற்கு காரணம் தமிழரின் சனத்தொகைப் பரம்பல் மாற்றம் தான். அடுத்து பொருளாதார வளத்தையும் பெரியளவில் தமிழர்கள் கொண்டிருக்கவில் லை. தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒன்றும் பிற நாடுகளின் கண்களில் உறுத்தும் கனிம வளங்களைக் கொண்டதும் அல்ல. பிரச்சினையில் தலையிட்டு தமிழர்களுக்குச் சார்பாக முடிவுகளை எடுப்பதற்கு எந்தவொரு நாட்டையும் தூண்டுகின்ற எந்த அடிப்படைக் காரணியையும் கொண்டிராத போதிலும் இந்தளவுக்குத் தமிழர்களின் பிரச்சினை உலகத்தால் கவனத்தில் கொள்ளப்படுவதே பெரிய விடயம் எனலாம். அதற்காக இதனைக்கொண்டே ஆறுதல் கொள்ள வேண்டும் என்று இங்கு கூற வரவில்லை.
சர்வதேச அரசியல் போக்கை எடுத்துக்கொண்டா ல் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டில் ஏதேனும் ஒரு வழியில் தலையிடுவதற்கு ஓர் அடிப்படையான காரணம் இருக்கும். தேவை அல்லது தேடல் இருக்கும். இலங்கையில் அமெரிக்கா ஏதேனும் ஒன்றை அடைய விரும்புகிறது என்றால் அதற்கு தமிழர்கள் பக்கம் சார்ந்து நின்றால் அதனைச் சாதிக்க முடியாது என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் இலங்கையில் எதையாவது அடைவதற்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதே முக்கியமானது, முதன்மையானது. ஏனென்றால் அவர்கள் தெரிவு செய்பவர்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் . அந்த ஆட்சியாளர்கள் மூலம் தான் நலனை அடைய முடியும். இலங்கையில் தமிழர்கள் தமக்கென ஒரு வலுவான ஆதாரத்தளத்தைக் கொண்டிராத நிலையிலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு ஒரு தீர்வை எட்ட நினைக்கிறது.
இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த யதார்த்தம் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி எந்தவொரு நாட்டுக்குமே இது பொருத்தமானது. இலங்கையில் எவரைக் கைக்குள் வைத்திருந்தால் தமக்கு அதிக லாபம் கிடைக்குமென்றே ஒவ்வொரு நாடும் சிந்திக்கின்றன. அதாவது வர்த்தகம், பொருளாதார வாய்ப்பு, கனிம வளங்கள், பாதுகாப்பு அல்லது அரசியல் மூலோபாயம் சார்ந்ததாகவே எந்தவொரு நாட்டினதும் தீர்மானங்கள் அமைகிறது. இவற்றை அடிப்படையாகவே வைத்தே ஒவ்வொரு நாட்டினதும் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
இந்தமுறை ஜெனிவா தீர்மானத்தை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்க ு இணை அனுசரணை வழங்கிய தென்னாபிரிக்காவ ும் ஆஸ்திரேலியாவும் இந்த முறை அனுசரணை வழங்கவில்லை. முக்கியமாக கடந்த ஆண்டுகளில் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்து வந்த ஆஸ்திரேலியா இப்போது சர்வதேச அரங்கில் இலங்கைக்காக குரல் கொடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் முடிவை மீளாய்வு செய்ய வைக்க அந்த நாட்டின் கட்சிகள், முக்கிய பிரமுகர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. இதற்கு ஒரே காரணம் அகதிகளைக் கட்டுப்படுத்த இலங்கையுடன் ஆஸ்திரேலியா செய்து கொண்ட உடன்படிக்கை தான். இந்த உடன்படிக்கை தொடர வேண்டுமானால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவு வழங்கித் தான் ஆக வேண்டும். ஒரு காலத்தில் பெருமளவு அகதிகள் ஒரு நாட்டை நோக்கித் தள்ளப்படும் போது அந்த நாடு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் எனறு எதிர்பார்க்கப்ப ட்ட ஒரு காலம் இருந்தது. இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு அவ்வாறு தான் திரும்பியது. இப்போது ஆஸ்திரேலியா இவ்விடயத்தில் எதிர்மாறாக நடக்கிறது. ஆஸ்திரேலியா நோக்கிய அகதிகளின் பெரும் படையெடுப்பே அந்த நாட்டின் இலங்கை தொடர்பான கொள்கையைப் புரட்டிப் போட்டு விட்டது. ஆஸ்திரேலியாவினத ு இந்த முடிவுக்கு தமிழர்களே முக்கிய காரணம் என்பது பலராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். ஆஸ்திரேலியாவின் முடிவை மாற்றக் காரணமான புலம்பெயர்ந்த தமிழர்களே ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை விமர்சிப்பதும் அதன்மீது அழுத்தம் கொடுக்க முனைவது இன்னொரு முரண். தென்னாப்பிரிக்க ாவை எடுத்துக் கொண்டால் அது எப்போதும் தமிழர்களின் நியாயத்தின் பக்கமே நிற்கும் என்ற கருத்தே இருந்து வந்தது. ஆனால் அந்தப் பாரம்பரிய நம்பிக்கையை உடைத்துக் கொண்டு ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள அரசாங்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லை , நடுநிலை வகித்தது. இன்னமும் தீர்மானம் எடுக்கப்படாத ஓர் ஏற்பாட்டாளர் பணியைப் பொறுப்பேற்று விட்டதான தோற்றத்தைக் காட்டி அந்த நாடு வாக்கெடுப்பில் நழுவிக்கொண்டிரு க்கிறது. தென்னாப்பிரிக்க ாவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து ஆராயச் சென்ற இலங்கை அரசின் உயர்மட்டக் குழு அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான வான் சேவை உடன்பாட்டைச் செய்துகொண்டு திரும்பியது. தமிழர் தரப்பை பொறுத்தவரையில் செல்வாக்கு செலுத்தத்தக்க நிலையிலிருந்தும ் ஆஸ்திரேலியா விடயத்திலும் தென்னாப்பிரிக்க ா விடயத்திலும் நிறையவே பாடம் கற்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி இந்தியா விடயத்தில் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர் . பக்கத்து நாடு பரிவு காட்டும் என்ற நம்பிக்கையிலும் இந்தியாவின் நாடித்துடிப்பைச ் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதும் அந்த நாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாமைக்கான காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த மூன்று நாடுகளிலுமே செல்வாக்கு செலுத்தத்தக்களவ ுக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்ற அளவுக்கு தமிழர்கள் இருந்த போதிலும் தீர்மானத்துக்கு ஆதரவு தர வைக்க அவர்களால் முடியாது போனது. இது தமிழர்களின் இராஜதந்திர முயற்சிகளுக்கு முக்கியமான பின்னடைவு.
போருக்குப் பிந்திய இலங்கை அரசாங்கம் எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட முறையில் உறவுகளை வளர்க்கலாம் என்று நன்றாகத் திட்டமிட்டுச் செயற்படுவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாட்டினதும் பலம் பலவீனத்தைக் கணித்து அதற்கேற்றவாறு உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறது. இது உலக அரங்கில் இலங்கைக்குப் பலமானதொரு நிழலைக் கொடுக்கும் விருட்சமாக வளர்ந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தப் புறச்சூழலில் சர்வதேச சமூகத்தை தமது நியாயங்களின் பக்கம் திருப்பி வைப்பதில் தமிழர் தரப்பு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் வாக்குப்பலத்தைக ் கொண்டு சாதிக்கத்தக்க நிலையை எட்டியுள்ள தமிழர் தரப்பு அத்தகைய பலம் இல்லாத நாடுகளில் வேறென்ன வழிமுறைகளைத் தெரிவு செய்யலாம் என்று ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் இன்றைய நவீன உலகின் இராஜதந்திரப் போக்கில் எல்லாமே மாறக்கூடியது தான். சீனாவும் ரஷ்யாவும் தமிழர்களின் விரோதிகளாக என்றென்றும் நிலைத்திருக்கும ் என்று கூற முடியாது. எப்போதும் அமெரிக்கா ஆதரித்து நிற்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
எனவே உலகத்துக்குப் பொதுவான ஒரு அணுகுமுறையில் இருந்து விலகி தமிழர் தரப்பு தமது இராஜதந்திர வழிகளை தனித்தனியாக வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகி வருவதாகவே தெரிகிறது. தமிழர் பிரச்சினை இன்று சர்வதேச மயப்பட்டுள்ள நிலையில் இது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே எனலாம்.
RSS feed for comments to this post