kasapu 350மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் "தீவிரவாதம், தீவிரவாதம்" என்றே கத்துகின்றார்.

நவம்பர் திங்கள் நெருங்கியவுடன் மும்பை தாக்குதல் மும்பை தாக்குதல் எனக் கூப்பாடு போடுகின்றார். 26/11 - க்குப் பதில் என்கின்றார்.

இந்தக் கூப்பாடுகளின் வழி அவர் மும்பை தாக்குதலை ஏற்பாடு செய்ய பாரத் என்ற தீவிரவாத அமைப்பு மத்திய உளவுத்துறை அப்போதைய அரசு ஆகியவற்றை காப்பாற்றிடவே முயற்சி செய்கின்றார்.

26/11 என அடையளப்படுத்தப்படும் மும்பை தாக்குதலை ஏற்பாடு செய்தவர்கள் அரசாங்கம் தான் என உள்துறையில் வேலை செய்த .R.I.S. மணி அவர்களும் இன்னொரு உள்துறை அதிகாரி சத்தீஷ் ஷவ்லாவும் கூறியிருந்தார்கள்.

இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு 14.07.2013 இல் முதற்பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.

அரசே முன்னின்று அந்தத் தாக்குதலை ஏன் செய்தது என்பதையும், அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

26/11 என்ற மும்பைத் தாக்குதலை நடத்தித்தான் அவர்கள் தடை செய்யப்பட்ட செயல்களில் தடை சட்டத்தைக் கடுமையாக்கினார்கள் (UAPA) இந்த சட்டத்தின் கீழ்தான், ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

சிறைகளில் தாங்கள் இளமையைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பின்னணியில் தான் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி படுகொலை செய்யப்பட்டார்.அப்போது கர்கரேயின் மனைவிக்கு மோடி 2 கோடி ரூபாயைக் கொடுத்தார். அதை அவர் முகத்திலேயே திருப்பி எறிந்தார் கர்கரேயின் மனைவி கவிதா கர்கரே.

மத்திய உள்துறை அதிகாரிகள் இத்தோடு நிற்கவில்லை. ஆர்.வி.எஸ்.மணி அவர்களும், சத்தீஷ் ஷர்மா அவர்களும் இன்னும் ஒருபடி மேலே போய், இன்னொரு உண்மையையும் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

அது மோடி வகையறாவின் மூத்தத்தலைவர், வாஜ்பேயி' இந்த நாட்டை ஆட்சி செய்கிறேன் என்ற பெயரில் அழித்துக் கொண்டிருந்தபோது நடந்தது. அதுதான் நாடளுமன்ற தாக்குதல். இதை அப்போதைய பரிவார அரசுதான் ஏற்பாடு செய்தது.

அந்த நாடாளுமன்ற தாக்குதலைக் காட்டித்தான் 'பாசிச பயங்கரச் சட்டம் பொடாவைக்' கொண்டுவந்தார்கள். இவையெல்லாம் இன்று இந்திய குடிமக்கள் அனைவரும் அறிந்த உண்மை. 

ஆனால் இவற்றிலெல்லாம் அப்பாவி முஸ்லிம்களை துக்கிலே தொங்கவிட்டு சிறையிலேயே புதைத்தார்கள். இன்னும் ஆயிரமாயிரம் முஸ்லிம்களை கொலை செய்து அந்த அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து அந்த அப்பாவி இளைஞர்களையும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்த முடும்பங்களையும் சின்னாப்பின்ன படுத்தினார்கள்.

karkorai book 350இஎத்தனையையும் செய்துவிட்டு, தீவிரவாதம், தீவிரவாதம் என ஒப்பாரி வைக்கின்றார் மோடி. இரு பாசிச பயங்கரவாத பரிவாரின் சிறப்புக் குணங்களுள் ஒன்று.

இந்த ஒப்பாரியை இந்தியாவில் வைத்தால் யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதனால் தான் வெளிநாடுகளில் பிதற்றுகின்றார்.

உண்மையைச் சொன்னால் பாசிச பால்தக்கரேக்குப் பின் இந்திய பாசிசத்தின் உண்மை முகம். "மோடி" என்றால் அது மிகையில்லை.

ஆனால் இந்தியாவில் மோடியின் கூப்பாடுகளை செவிமடுப்பார் எவருமிருக்கமாட்டார்கள். ஏனெனில் கர்கரேயைக் கொலை செய்தது யார்?

இந்திய தீவிரவாதத்தின் உண்மை முகம் என்ற நூலும் கசாப் - ஐ இரகசியமாக தூக்கிலிட்டது ஏன்? என்ற நூலும் 26/11 நீதிதேவன் மயக்கம் ஏன்? என்ற நூலும் உண்மைகளை முழங்கிக் கொண்டே இருக்கின்றன.

- எம்.ஜி.எம்

வாசகர்கள் மேலும் படிக்க வேண்டிய நூல்கள் நாடாளுமன்ற தாக்குத; வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள். விலை. ரூ.20/-

கர்கரேயை கொலை செய்தது யார்? இந்திய தீவிரவாதத்தின் உண்மை முகம். விலை. ரூ.150/-

கசாப்பை இரகசியமாக தூக்கிலிட்டது ஏன்? விலை. ரூ.25/-

 

Pin It