கடமையையும்,
கட்டுப்பாட்டையும்,
சுட்டுக்கொன்ற...
காவல்துறை!
கண்களும்...
செவிகளும் செத்துப்போன,
நீதித்துறை!
காசையும், கற்பையும்..
கடன் வாங்கும்,
கல்வித்துறை!
விபச்சாரத்துடன்,
வீறு நடைபோடும்,
விளையாட்டுத்துறை!
முப்படைகளுக்கும்...
நாமமிட,
காத்துக் கொண்டிருக்கும்...
பாதுகாப்புத்துறை!
சுத்தமின்றி.. சத்தமின்றி...
செத்துக் கொண்டிருக்கும்,
சுகாதாரத்துறை!
மாறி, மாறி...
ஊழலை உற்பத்தியாக்கும்,
உள்துறை, வெளித்துறை!
பழதை புதிதாக்கியும்...
புதிதை பழதாக்கியும்...
பொய்த்துப் போன,
போக்குவரத்துத்துறை!
முதல்களை
முழுங்கும் முதலைகளாய்,
தொழிற்துறை!
பஞ்சம், பசியால்...
செத்துக் கொண்டிருக்கும்,
மக்கள்ஜாதி!
அதற்கு நெருப்பிட்டு,
அந்த தீயில்...
குளிர்காயும்,
அதிகாரிகள்,
அதிகார அரசியல்வாதிகள்!
இப்படி எல்லாவற்றிலும்
விபச்சாரத்தை வியாபாரமாக்கி...
ஊழலை உத்யோகமாக்கிய...
ஒட்டுமொத்த நீங்களும்...
ஒருசேர வந்தாலும்,
ஒன்றை மட்டும் மனதில்
மனப்பாடமாக்கி கொள்ளுங்கள்
விலைமாதர்களே!
என்...
இந்தியா...
விற்பனைக்கு,
அல்ல!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
மிக அருமையான படைப்பு.
RSS feed for comments to this post