கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2007
- விவரங்கள்
- எஸ்.தேன்மொழி
- பிரிவு: சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2007
எஸ். தேன்மொழி கவிதைகள்
மழைக்காள மௌனத்தில்
மழைக்கான அறிகுறியோடும்
மழையோடும் அந்த சிறுமி
பிரசவிக்கிறாள் என்னிலிருந்து
தனித்துவமான சோகத்தைச் சுமந்து
தனியாய் என்னை அடைகாக்கிறாள்
மழையின் இழைகளில் முகாரி
பாடுகிறாள் ஆத்மாவின் ராகமாய்
எனக்கான அந்த நேர சங்கீதம்
அவளிமிருந்து கடன் வாங்கப்பட்டவை
மழைபட்டவுடன் மறைந்து விடும்
வானவில்லைப் போல
மழை விட்டவுடன் என்னை விட்டு
அவள் கடந்து போக நேரிடுகிறது
என்னைக் கடந்து போக
மறுக்கிறதந்த மேகம்
பேதமற்று நீளும் என் கைகளால்
தொட்டு விட முயல்கிறேன்.
கடந்து போக மறந்து
இடைவெளி சுருங்கி
திரண்டு மதர்த்த மேகம்
தெருவாசியின் பாடல் போல
இருப்பை விரயம் செய்ய
நீராகி போய்விட்டேன் நான்
வெளியாகி போயிருக்குமோ
அந்த மேகம்